கல்விஉதவிதொகை பெற மாணவர்களுக்கு அரசு சார்பில் அறிவிப்பு . இந்தியாவில் ஒன்றாம் வகுப்பு படித்தல் முதல் ஆராய்ச்சி படிப்பு படித்தல் வரை மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவிதொகை வழங்கப்படுகிறது .
சிறுபான்மையினர் கல்விகற்க மாணவர்களுக்கான நிதிப்பற்றாகுறையை போக்க மத்திய அரசு ஆரம்பகல்விமுதல் ஆராய்ச்சி படிப்பு வரை மாணவர்கள் கல்வி உதவிகள் பெறலாம் . அத்தகைய கல்வி உதவியை பெற மத்திய அரசின் உதவிதொகைக்கான இணையதளத்தை காணலாம் .
மத்திய அரசின் கல்விஉதவிதொகையை பெறுவதற்கு முன்பு ஆகஸ்ட் வரை உதவிதொகை விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர் ஆனால் அது செப்டம்பர் மாத இறுதிவரை விண்ணப்பிக்க நாட்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது .
மத்திய அரசின் கல்விஉதவிதொகை வழங்கும் சலுகையை மாணவர்கள் நன்றாக பயன்படுத்தவேண்டும் . கல்வி தொகையானது ஒன்றாம் வகுப்புமுதல் மாணவர்கள் பெறலாம் .
சார்ந்த பதிவுகள் :மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவி தொகை
கல்விஉதவிதொகை:
மாணவர்கள் கல்விஉதவிதொகை பெற்று அதனை தங்கள் கல்விவளர்ச்சிக்கேற்ப பயன்படுத்தலாம் . மாணவர்களுக்கான வளத்தை அளித்து கல்விவளத்தை அதிகரிக்கலாம். மேலும் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுள் இதுஒன்றாகும்.
சிறப்பு மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை வழங்க மத்திய அரசு முடிவு
கல்வி உதவிதொகை பெறும் இந்த சலுகையை அனைத்து மாணவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் . தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு கற்றுகொடுப்பது போல இதுப்பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பவர்களுக்கு இதுகுறித்து தெரிவிக்கவும் . அனைத்து மாணவ்ர்களும் பயன்பெற வேண்டும் .
கல்விஉதவிதொகை பெறுவது குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ இணைய தளத்தினை இங்கு இணைத்துள்ளோம் .
சார்ந்த பதிவுகள்: மத்திய அரசின் கல்விஉதவி தொகையை பெற விண்ணப்பிக்கவும்