எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிபெண் பட்டியல் நாளை முதல் நேரடியாக பெற்றுகொள்ளலாம் . கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொது தேர்வு எழுதிய மாணவர்களின் மதிபெண் பட்டியல் நாளை முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது . தனி தேர்வு எழுதியவர்கள் அவர்கள் தேர்வு எழுதிய அந்தந்த தேர்வு மையங்களில் பெற்று கொள்ளலாம் .
மதிபெண் பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை மாற்றம் செய்ய 26.072017 முதல் ஆகஸ்ட் 4 வரை விண்ணபிக்கலாம் .
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்குவது அனைத்து மாணவர்களின் பெயர்களும் முதன் முறையாக தமிழில் பதிவு செய்யப்பட்டுள்ளது . மதிபெண் பட்டியலில் ஏதேனும் திருத்தம் வேண்டுமானால் மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் மதிபெண் பட்டியல் தவறினை ஆசிரியர்கள் நேரடியாக இணையத் தளம் வாயிலாக அறிவிக்கலாம் . மாணவர்கள் திருத்தப்பட்ட தங்கள் மதிபெண் பட்டியலை அவர்கள் பயின்ற பள்ளியில் ஆகஸ்ட் 21 ஆம் நாள் நேரடியாக பெற்று கொள்ளலாம் . திருத்தப்பட்ட மதிபெண் பட்டியலை பெற்றுகொள்ளும்போது பழைய அசல் சான்றிதழை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
சார்ந்த பதிவுகள்:
மூவாயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் தகவல்
பள்ளிகளில் டிஜிட்டல் திட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது