தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது திருச்சி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் காலியாக உள்ள இசை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது தேர்ச்சி பெற்று இசைத்துறையில் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : தமிழக அரசு
துறை : இந்து அறக்கட்டளைத் துறை (TNHRCE)
பணியிடம் : திருச்சி சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
பணி : இசை ஆசிரியர்
கல்வித் தகுதி :
தேவார இசை ஆசிரியர் - 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தேவார இசைத் துறையில் 5 ஆண்டுகள் வரையுல் அறிவு மற்றும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
குரலிசை ஆசிரியர் - 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, சங்கீத துறையில் 5 ஆண்டுகள் வரையில் அனுபவம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இசை பள்ளியில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.07.2021 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 30.11.2021 தேதிக்குள் www.samayapurammariammantemple.org, https://hree.tn.gov.in அல்லது கீழே வழங்கப்பட்டுள்ள அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம், திருச்சிராபள்ளி மாவட்டம் - 621 112.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.