தமிழக அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூர் சமூக பாகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள Counsellor பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : சமூக பாகாப்பு துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லம், தஞ்சாவூர்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Counsellor
மொத்த காலிப் பணியிடம் : 03
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Psychology பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : நாள் ஒன்றுக்கு ரூ.ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 24.09.2021 அன்றுக்குள் Observer, Government Observation Home, Opp to South Police Station, Thanjavur என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அசல் ஆவணங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://thanjavur.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.