திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Controller of Examinations பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.80 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் (MTWU)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Controller of Examinations
மொத்த காலிப்பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி:-
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், Deputy Registrar அல்லது அதற்கு இணையான பதவிகளில் 8 முதல் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருகக வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 58 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.7,000 முதல் ரூ.80,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.motherteresawomenuniv.ac.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அத்துவம்பட்டி, கொடைக்கானல் -624 101, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
- எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.350
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்து மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.motherteresawomenuniv.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.