மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்னையில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள சூப்பர்வைசர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பேங்க் ஆப் பரோடா (BOB)
பணியிடம் : சென்னை
பணி : BUSINESS CORRESPONDENT SUPERVISOR
காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்ச கணினி அறிவு (MS Office, email, Internet etc) உடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். M.Sc. (IT) / BE (IT) / MCA / MBA தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுவரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,000 முதல் ரூ.25,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து The Regional Manager Bank of Baroda Chennai Rural Region, 12. R.L.Road, Dugar Towers, Egmore, Chennai 600 008 என்ற முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.07.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்கவும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bankofbaroda.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.