தமிழக சிறைச் சாலையில் காலியாக உள்ள சிறைக் காவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட உள்ளது. எஸ்டி பிரிவினர் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழக சிறைத் துறை
மேலாண்மை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பணி : சிறைக் காவலர்
மொத்த காலிப்பணியிடம் : 01
கல்வித் தகுதி : குற்றவியல் துறையில் முதுகலைப் பட்டம், குற்றவியல் நீதி நிர்வாகம், சமூகப் பணியில் முதுகலைப் பட்டம்
ஊதியம் : ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnpsc.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, உடற் திறன் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
முக்கியத் தேதிகள்:-
- அறிவிப்பு வெளியான நாள் : 03.10.2019
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.10.2019
- விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள் : 02.11.2019
தேர்வு நாட்கள் மற்றும் நேரம்:-
முதல் தாள் : 22.12.2019 அன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை
இரண்டாம் தாள் : 22.12.2019 அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/latest-notification.html என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












