ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற உதவும் உத்திகளை கல்வி நிபுணர்களும், கல்வியாளர்களும் வழங்குகின்றனர். இதைப் பின்பற்றிப் படித்தாலே தேர்வில் வெற்றி காண முடியும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நாட்டின் உயர்கல்வியில், இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT), தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT) உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ஒரு பிரதான இடத்தைப் பெற்றுள்ளன. இந்த உயர்கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் சிறந்த பட்டதாரி, நிபுணர்களை உருவாக்குகின்றன.
இந்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஏறத்தாழ ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்குகின்றது. சிறந்த கற்றல்/கற்பித்த முறைகள், அனுபவமும் திறனும் மிக்க பேராசிரியர்கள், வேலைவாய்ப்பு திறன்களை அதிகரிக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை இந்த நிறுவனங்கள் கொண்டுள்ளன.

ஜேஇஇ முதன்மைத் தேர்வு:
தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்தியத் தகவல் தொழில் நுட்பக் கழகங்கள்(IIIT), பிற மத்திய் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் (CFTI) மற்றும் மாநில அரசுகளால் நிதியளிக்கப்பட்ட/அங்கீகரிக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பு (BE/B. Tech) சேர்க்கைக்காக ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (முதன்மை JEE Main) நடத்தப்படுகிறது.
மேலும், இந்தியாவில் செயல்பட்டு வரும் ஐஐடி நிறுவனங்களில் சேர்க்கைக்கு இந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே ஐஐடி நிறுவனங்களில் சேர்த்து படிப்பதற்கு நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸுடு நுழைவுத் தேர்வில் (JEE - Advanced) பங்கு பெற முடியும்.
கூட்டு நுழைவுத் தேர்வு -முன்னதாக ஐஐடி-ஜேஇஇ என அழைக்கப்படும் மேம்பட்ட (ஜேஇஇ அட்வான்ஸ்டு) ஜேஇஇ அட்வான்ஸ்டு 60 ஆண்டுகளுக்கு முன்பு 1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பொறியியல், அறிவியல் மற்றும் கட்டிடக்கலை போன்ற ஐஐடிகளில் உள்ள பல்வேறு படிப்புகளில் சேர்க்கை வழங்குவதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு இரண்டு ஷிப்டுகளாகவும், ஒவ்வொரு தாள் 3 மணி நேரமும். எனவே ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்டு தேர்வின் மொத்த கால அளவு ஒரு நாளைக்கு 6 மணி நேரம் ஆகும். இது ஆண்டுக்கு ஒரு முறை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடத்தப்படுகிறது. ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்டு ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 2 முயற்சிகளை மட்டுமே அனுமதிக்கிறது.
தேர்வு முறைஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு ஆன்லைன் முறையில் அல்லது கணினி அடிப்படையிலான இரண்டு கட்டாய தாள்களுடன் நடத்தப்படுகிறது- தாள் 1 மற்றும் தாள் 2. இரண்டு தாள்களும் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளன, அதாவது இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம். சமீபத்திய புதுப்பித்தலில் இருந்து, ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்டு வினாத்தாளில் ஒரே பதில் சரியான மற்றும் இரட்டை பதில் சரியான, எண் மதிப்பு கேள்விகளுடன் பொருந்தக்கூடிய வகை கேள்விகளுடன் பல தேர்வு கேள்விகள் இருக்கும். ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்டு தேர்வு முழு, பகுதி மற்றும் பூஜ்ஜிய மதிப்பெண்களின் கருத்தைப் பின்பற்றுகிறது.கோரக்பூரில் உள்ள சிறந்த சிபிஎஸ்இ பள்ளி JEE மேம்பட்ட வடிவத்தின் அடிப்படையில் தினசரி பயிற்சி தாள்களை வழங்குகிறது.
ஜேஇஇ (JEE) அட்வான்ஸ்டு பாடத்திட்டம் JEE முதன்மை பாடத்திட்டத்தில் இருந்து சற்று வித்தியாசமானது. ஜேஇஇ அட்வான்ஸ்டு பொதுவாக தலைப்புகளை மனப்பாடம் செய்வதைத் தவிர்க்கிறது மற்றும் கருத்தியல் மற்றும் பயன்பாட்டு அடிப்படையிலான தலைப்புகளைப் பின்பற்றுகிறது.
ஐஐடி-இந்திய தொழில்நுட்பக் கழகம் (பிஎச்யூ) வாரணாசி, இந்திய சுரங்கவியல் பள்ளி தன்பாத் மற்றும் இந்திய சுரங்கவியல் பள்ளி பல்கலைக்கழகம் (Indian School of Mines University,ISMU) தன்பாத் கல்வியகங்களும் தங்கள் கல்லூரிச் சேர்க்கைக்கு இத்தேர்வை மையமாக கொண்டிருக்கின்றன. 2007ஆம் ஆண்டிலிருந்து புதிதாக நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆய்வு கழகங்கள் (Indian Institutes of Science Education and Research), கொல்கொத்தா, புணே, மொகாலி, போபால், திருவனந்தபுரம் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Space Science and Technology), திருவனந்தபுரம் இந்திய கடல்வழி ஆய்வுகள் கழகம் (Indian Institute of Maritime Studies), மும்பை ராஜீவ் காந்தி பெட்ரோலியம் தொழில்நுட்பக் கழகம்(Rajiv Gandhi Institute of Petroleum Technology),ரே பரேலி,உத்தரப்பிரதேசம்
கல்விக்கூடங்களும் இத்தேர்வின் விரிவாக்கப்பட்ட தகுதிப்பட்டியலை (Extended Merit List) தங்கள் மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்துகின்றன.
விண்ணப்பம்:
12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2024 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், BE/BTech படிப்புகளில் சேர்க்கை பெற 12 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 75% பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு (SC/ST) இந்த எண்ணிக்கை 65% ஆகும். மேலும், கணிதம், இயற்பியலை கட்டாயப் பாடங்களாக கொண்டிருக்க வேண்டும். வேதியியல்/ உயிரியல்/ உயிரி தொழில்நுட்பம்/ தொழில்நுட்ப தொழிற்கல்வி பாடம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
ஜே.இ.இ., இரண்டாம் கட்ட தேர்வு (அட்வான்ஸ்டு தேர்வு): பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., உட்பட பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு உதவும் இந்த ஜே.இ.இ., இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதியான மாணவ, மாணவிகள் தற்போது விண்ணப்பிக்கத் தொடங்கலாம்.
என்.டி.ஏ., எனும் தேசிய தேர்வு முகமை, ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என தேர்வுகளை நடத்துகிறது. ஜே.இ.இ.,- மெயின் தேர்வில் வெற்றி பெறும் மாணவகள் மட்டுமே ஜே.இ.இ.,- அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதிகள்: 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களை கட்டாயப் பாடங்களாக கொண்டிருக்க வேண்டும். மேலும், வேதியியல், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், தொழில்நுட்ப தொழில்கல்வி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
இந்த ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 2 ஆகும். மேலும் விவரங்களுக்கு https://jeemain.nta.ac.in என்ற இணையதள முகவரியைக் காணலாம்.

தேர்வில் வெற்றி பெறுவது எப்படி...!
இனி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என்பதைக் காணலாம்.
தனிப்பட்ட அணுகுமுறை: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு கடினமானது என்பதை தேர்வர்கள் உணர்ந்திருப்பார்கள். எனவே,
மாதிரித் தேர்வுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றிய புரிதலைப் பெறவேண்டும்.. இதன் அடிப்படையில், தேர்வை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து உங்கள் தனிப்பட்ட அணுகுமுறை அல்லது உத்தி அல்லது திட்டத்தை உருவாக்க வேண்டும். உங்கள் ஆசிரியர் அல்லது வழிகாட்டி பெரும்பாலான மாணவர்களின் பொதுவான வடிவத்தின் அடிப்படையில் பின்பற்றுவதற்கான திட்டத்தை உங்களுக்கு வழங்கியிருக்கலாம். உங்கள் சொந்த விருப்பத்திற்கு ஏற்ப அதை நன்றாக மெருகேற்றி அந்தத் திட்டத்தை பின்பற்றலாம்.
பாடத்திட்டம்:
நீங்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்குத் தயாராகும் போது, ஜேஇஇ (JEE) பாடத்திட்டத்தை ஒருமுறையாவது படிக்க வேண்டும். இது உங்களுக்கு ஒரு நல்ல அடிப்படைப் புரிதலைப் பெற்றுத் தரும். மேலும் இது ஜேஇஇ (JEE) முதன்மை மற்றும் அட்வான்ஸ்டு பாடத்திட்ட நோக்கங்கள், முக்கியமான தலைப்புகள், தேர்வு முறை மற்றும் பிற விவரங்களை பெற அவர்களுக்கு உதவும். தேர்வில் வெற்றி பெற நினைக்கும் மாணவர்கள் மற்றவர்களை விட சற்று முன்னோக்கி இருக்க இது நிச்சயமாக உங்களுக்கு உதவும்.
வெவ்வேறு படிப்பு நுட்பங்களைப் பின்பற்றுதல்:
ஐஐடி ஜேஇஇ பாடத்திட்டமானது, முக்கியமாக இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியல் ஆகிய மூன்று அறிவியல் பாடங்களைக் கொண்டுள்ளது. இந்த மூன்று பாடங்களும் வேறுபட்டவையாக உள்ளன. மேலும் இவை, வெவ்வேறு வகையானவை. எடுத்துக்காட்டாக, கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை ஊன்றிப் படிக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் தேர்வில் வெற்றி பெற முடியும். வேதியியல் பாடத்தைப் படிப்பது என்பது முக்கியமான குறியீடுகள் மற்றும் சூத்திரங்களை நினைவில் கொள்வதற்கு நல்ல நினைவக திறன்களைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு பாடத்திற்கும் சரியான ஆய்வு முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும் .

அதீத நம்பிக்கை தேவை:
ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு என்பது மிகவும் கடினமானதுதான். எனவே இந்தத் தேர்வில் வெற்றி பெற குறைந்த தன்னம்பிக்கை கொண்டவர்களைக் காட்டிலும் உயர், அதீத நம்பிக்கை அளவைக் கொண்டிருப்பது மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. உங்கள் மன உறுதியை உயர்வாக வைத்துக்கொண்டு, தேர்வுக்குத் தயாராகுங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் எந்த பிரச்சினையையும் மற்றவர்களும் எதிர்கொள்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களால் அமைதியை நிலைநிறுத்தி, பின்பற்ற முடிந்தால், நீங்கள் உண்மையில் மற்றவர்களை விட நீங்கள் ஒரு படி முன்னால் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே, நம்பிக்கையுடன் தேர்வை அணுகுங்கள்.
கேள்விகளை சரியாக படித்து எழுதுதல்:
உங்களிடம் வரும் வினாத்தாளை முதலில் முழுமையாகவும், நிதானமாகவும் படித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் தேர்வர்களை குழப்புவதற்காகவே கேள்விகளை மாற்றிக் கேட்டு சிக்க வைப்பார்கள். உங்கள் பாடங்களுக்குரிய தலைப்புகளை நீங்கள் சரியாகப் படித்திருந்தால், அந்தக் கேள்விகளை எளிதில் புரிந்து எழுத முடியும். எனவே, மன அழுத்தமின்றி தேர்வை எழுதுங்கள். இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்க, அவற்றை முயற்சிக்கும் முன் அனைத்து கேள்விகளையும் சரியாகப் படித்துப் பார்த்தல் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மன உறுதியை பராமரித்தல்:
தேர்வு கடினம், பாடங்கள் கடினம் என்றாலும் மன உறுதியை நன்கு பராமரித்து தேர்வை எதிர்கொள்ளவேண்டும்.
தேர்வு முழுவதும் உங்கள் மன உறுதியை நீங்கள் பராமரிக்க வேண்டும். தேர்வு முடிவதற்குள் ஆர்வம் குறையாமல், சலிப்படையாமல் இருக்க, தேர்வு தொடங்கும் முன் மனதளவில் உங்களை தயார்படுத்திக் கொள்வது அவசியம்.
இது பல மாணவர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று, தேர்வுக்கு இடையில் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.
போதுமான ஓய்வு எடுத்தல்:
தேர்வுக்காக மாணவர்களாகிய நீங்கள் நீண்ட நேரம் படிக்கக் கூடாது, மாறாக, போதுமான ஓய்வு மற்றும் தூக்கத்தைப் பெற வேண்டும். தேர்வுக்கு கடைசி நாட்கள் சிறிது மட்டுமே இருப்பதாக நீங்கள் எண்ணலாம். ஆனாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் போதுமான ஓய்வு எடுத்து தேர்வுக்குப் படியுங்கள். உங்கள் மூளைக்கு போதுமான ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம். நீங்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான கேள்விகள் உங்கள் கருத்துகளின் பயன்பாடு மற்றும் விமர்சன சிந்தனை திறன்களை சோதிக்கும், எனவே தேர்வு வினாக்களை எளிதில் புரிந்துகொள்ள மூளை சிறப்பாக செயல்பட அதற்கு ஓய்வு அவசியம்.
இந்த அம்சங்களைப் பின்பற்றினால் நீங்கள் ஜேஇஇ அட்வானஸ்டு தேர்வில் வெற்றி பெறலாம்.


Click it and Unblock the Notifications












