பொதுவாகவே உங்களது நட்பு வட்டாரத்தில் யாராவது ஐஏஎஸ் போன்ற அரசு போட்டித் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எப்போதும் ஏதோ ஓர் பரபரப்பான மனநிலையுடனேயே காணப்படுவர். இந்த நிமிடத்தை வேஸ்ட் செய்யக் கூடாது, இந்த நேரத்தில் ஒரு கேள்வி- பதிலை படித்துவிட வேண்டும் என்று எப்போதுமே புத்தகத்தில் ஊர்ந்துகொண்டிருப்பர்.
நண்பர் வீட்டில் ஆடையின்றி பெண் வந்து கதவை திறந்தால் என்ன செய்வீர்கள்?!
ஆனால், அப்படி தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டிருப்போர் செய்யக்கூடிய தவறு பொதுவான கேள்வி-பதில்கள் குறித்து அறிந்திராமல் இருப்பதே. அறிவியல், சமூகவியல், தமிழ் என எத்தனைதான் படித்தாலும் கூடவே பொது அறிவையும் வளர்த்துக் கொள்வதில் அக்கறை செலுத்துங்கள். ஏனெனில் பெரும்பாலான நேரங்களில் இதுவே உங்களுக்கு கேள்வியாக வந்துநிற்கும்.
சரி வாருங்கள், ஐஏஎஸ்-யில் கேட்கப்படும் அசாத்தியமான சில கேள்விகள் குறித்தும், அதற்கு நம்பவே முடியாதவாறு அளிக்கப்படும் சரியான பதில்கள் குறித்தும் இத்தொகுப்பில் பார்க்கலாம்.
ஸ்மார்ட் போன் என ஏன் அழைக்கப்படுகிறது ?
ஒரு காலத்தில் கைபேசியாக இருந்தது தற்போது நாகரீக வளர்ச்சியடைந்து ஸ்மார்ட் போன் என்றாகியுள்ளது. எந்த ஒரு சந்தேகத்தையும் அந்த நொடியே தெளிவுபடுத்துவதில் சட்டன நாம் எடுப்பது ஸ்மார்ட் போன் தான். உலகையே ஒற்றைக் கையில் வைத்திருப்பதற்கு சமம் இது. இதில் ஸ்மார்ட் என்னும் சொல் புத்திசாலி என வகைபடும். உண்மையில் ஒரு மனிதரை விட புத்திசாலியாக செயல்படுவதாலேயே இது ஸ்மார்ட் போன் என்றழைக்கப்படுகிறது.
காவிரி நீர் சேரும் ஸ்டான்லி அணை எங்குள்ளது ?
காவிரி வழிந்தோடும் வழியில் உள்ள அணைகள் என்றால் அமராவதி, பானசுரா, மேட்டூர், கல்லனை, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளே முதலில் நினைவுக்கு வரும். ஸ்டான்லி அணை எங்குள்ளது என தயங்கிவிட வேண்டாம். இதில் மேட்டூர் அணையின் மற்றொரு பெயர் தான் ஸ்டான்லி அணை என நினைவில் கொள்ளுங்கள்.
சத்தம் (ஒலி) எதன் ஊடாக பரவாது ?
ஒலி எல்லா இடத்திலும் தான் பரவும் என நினைத்து விடாதீர்கள். ஒலி என்பது துகள் நகர்வு, அழுத்தத்தில் ஏற்படும் மாற்றம், துகள்களின் திசைவேகம் ஆகியவை விரிந்து கொடுக்கக்கூடிய ஊடகத்தின் வழியாக பயணிக்கும். வெற்றிடத்தில் மட்டுமே இது பரவாது.
எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவரை எவ்வாறு கண்டறிவாய் ?
எச்ஐவி என்பது ஒரு நோயின் வகையே. அதனால் பாதிக்கப்பட்டவரை கண்களால் பார்த்தவாறே கண்டறிய முடியாது. எலைசா வெஸ்டான் பிளாட் என்னும் பரிசோதனையின் மூலமே கண்டறிய முடியும்.
இரு தந்தைகளும் தனது மகன்களுடன் மீன் பிடிக்கச் சென்றனர். ஒவ்வொருவரும் ஒரு மீன் வீதம் பிடித்தனர். ஆனால் பிடிபட்ட மொத்த மீன்கள் மூன்று. அது எப்படி ?
இதில் ஒரு தந்தை என்பது தாத்தா, தாத்தா தனது மகன், மகனுடைய மகன், அதாவது பேரன் ஆகிய மூவருமே மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மூன்று பேர் மூன்று மீன்கள் பிடித்துள்ளனர். கேள்வியை பொருமையாக ஆராய்ந்தாலேயே இதற்கான விடை கிடைக்கும்.
மின்சாரத்தில் இயங்கும் புகைரயில் ஒன்று வேகமாக மேற்கு திசை நோக்கி செல்கிறது. அந்த நேரத்தில் வடக்கிலிருந்து கடுமையான காற்று வீசுகிறது. இப்போது ரயிலின் புகை எந்த திசையை நோக்கிச் செல்லும் ?
கொஞ்சமும் தினறிவிடாதீர்கள். கேள்வியை மீண்டும் மீண்டும் அழுத்தமாகப் படித்தால் கேள்விலேயே உங்களுக்கான பதில் இருக்கும். மின்சார ரயிலில் புகை வராது தானே.
ஐஸ்வர்யா ராய்க்கு எப்படி உலக அழகி பட்டம் கிடைத்தது?
ஐஸ்வர்யா ராய் என்றதுமே உடனே எதையும் சிந்திக்காமல் அவர்கள் அழகு, அதனால் தான் இந்தப் பட்டம் கிடைத்தது என்று பதில் அளித்துவிடாதீர்கள். குறிப்பாக நம்மில் பலர் அவரது அழதான் காரணம் எனவும் நினைத்திருப்போம். ஆனால், உலக அழகிப் போட்டியில் அவரிடம் "ஒருவர் இறந்த பிறகு மீண்டும் இந்த உலகை பார்க்க முடியுமா ?" என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நம்ம ஐஸ்வர்யா அளித்த பதில் "கண்தானம் செய்தால் பார்க்க முடியும்" என்று. இதற்காகத்தான் அவருக்கு உலக அழகி பட்டம்.