நேர்முகத் தேர்வில் நீங்கள் என்னதான் சரியாக நடந்துகொண்டாலும் சிலசமயம் உங்கள் தகுதிக்கு குறைவான இடங்களில் கூட நீங்கள் நிராகரிக்கப்படுவீர்கள்.
இதற்கு என்ன காரணம் என நீங்கள் சிந்தித்தது உண்டா ? இவை கூட அதற்கு காரணமாக இருக்கலாம்.
1. பெர்ஷனாலிட்டி மிஸ் மேட்ச்:
வேலைக்கு தகுந்தாற் போல் சரியான ஆளுமையை வெளிப்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
ஒரு கல்லூரியின் நிறுவனர் வேறுவகையில் சிந்திப்பார், பிரின்சிபால் வேறு வகையில் சிந்திப்பார். நீங்கள் எந்த பணி அல்லது பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அது தொடர்பான தனித்திறமைகளை வெளிகாட்டினால் பாஸ் மார்க்.
2. நேர மேலாண்மை:
முதல் நாள் நேர்காணலுக்கே தாமதமாக வந்தால், இது நியாமா சார்... ஏன் வரக்கூடாதா என்று கேட்கிறீர்களா? நீங்கள் முதல் நாள் சொல்லும் கதை சரவணன் மீனாட்சி சீரியல் போல் அனுதினமும் நீளாது என என்ன நிச்சயம் என பயம் வருமா வராதா. எனவே ஆன் டைம் எப்போதும் சிறப்பு.
3. ஆர்வம் இன்மை:
ஆர்வம் என்பது வெற்றிக்கான கதைவை திறக்கும் சாவி போன்றது. ஒரு வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு, அது தொடர்பாக கேள்வி கேட்டால் அதுவா... பிடிக்காது, இதுவா... சேசே பிடிக்கவே பிடிக்காது என வேலை சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் ஓராங்கட்டினால் அப்புறம் எப்படி ஆர்டார் வங்குவது.
4. ரெபரென்ஸ்:
சில வேலைகளை பொருத்தவரை விதிவிலக்கு. மற்ற வேலைகளுக்கு முன்னர் பணியாற்றிய நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளின் பரிந்துரை என்பது இன்றியமையாதது. எனவே சக பணியாளர்களிடம் எப்போதும் அன்பு பாராட்ட தவறாதீர்கள்.