மாணவ வாழ்கையில் பெற்றோர்களின் பங்கு

மாணவ வாழ்கையில் பெற்றோர்கள் மிகச்சிறந்த பங்கு வகிக்கின்றனர் . பிள்ளைகளின் வாழ்வில் பெற்றோர்களின் பங்கு அதிகரித்து காணப்படுவது இயல்பானது .இந்தியா போன்ற நாட்டில் அது என்றும் மாறதது நமக்காக சிந்திக்கும்

By Sobana


மாணவ வாழ்கையில் பெற்றோர்கள் மிகச்சிறந்த பங்கு வகிக்கின்றனர் . பிள்ளைகளின் வாழ்வில் பெற்றோர்களின் பங்கு அதிகரித்து காணப்படுவது இயல்பானது .இந்தியா போன்ற நாட்டில் அது என்றும் மாறதது நமக்காக சிந்திக்கும் அதிசிறந்த உறவுகள் என்றால் அது பெற்றோரேர்களே .

மாணவ வாழ்கையில் பெற்றோர்கள் மிகச்சிறந்த பங்கு வகிக்கின்றனர் .
  • நல்ல பள்ளி , படிப்பதற்கான சூழல் , படிப்பதற்கான சிறப்பு வகுப்பு ஏற்ப்படுத்தி தர வேண்டும் .
  • மாணவர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
  • பெற்றோர்கள் பிள்ளைகளின் பள்ளி கூட்டத்தில் தவறாது பங்கு கொண்டு ஆசிரியர்கள் கூறுவதை செயல்படுத்த வேண்டும் .
  • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற பொண் மொழியை மாணவர்கள் வாழ்வில் செலுத்தி செயல்பட வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமை ஆகும் .
  • பெற்றோர்கள் பிள்ளைகளின் மனநலன் அறிந்து செயல்பட வேண்டும் .
  • பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் வயதுகேற்றவாறு தங்களை மேம்படுத்திகொள்ள வேண்டும் .
  • இளம்பிள்ளைகளை அணுகுபோது தோழமையோடு இருப்பதுடன், அவர்களிகளின் படிப்பில் கவனம் செலுத்த உதவ வேண்டும் . ஏதேனும் இடையூறுகள் இருப்பின் அதனை இனம் கண்டு சரி செய்ய வேண்டும்.
  • பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பதுடன் , மதிபெண்களுக்காக அழுத்தம் கொடுப்பதை நிறுத்த வேண்டும் . மேலும் தோல்வியை சந்திக்கும் தங்களது பிள்ளைகளுக்கு ஆறுதலாக இருப்பதுடன் தோல்வியில் இருந்து மீண்டு வர உதவ வேண்டும் .
  • பெறோர்கள் பிள்ளைகளின் நலன் கருதி செயல்பட வேண்டும் அவர்களின் மற்ற தனித்திறமைகளை ஊக்குவித்து அவர்களின் எதிர்காலத்தில் தனித்திறமைக்கு ஏதேனும் சாதக சூழல் இருப்பின் ஆதரவு தரவேண்டும் .
  • பெற்றோர்கள் பள்ளி , கல்லுரிமாணவர்களுக்கு அவர்களின் முடிவு குறித்து சாதக பாதகங்களை தெரிவியுங்கள் , முடிவெடுத்து செயல்பட சுதந்திரமளியுங்கள் அதனால் உங்கள் பிள்ளைகள் சந்திக்க நேரிடும் நேர்மறை , எதிர்மறை நிகழ்வுகள் எதுவானாலும் ஆதரவளியுங்கள் மீட்டு வாருங்கள் அதுவே சாலச்சிறந்தது .
  • பிள்ளைகளுக்கு எவ்வளவு சுதந்திரம் அளிக்கிறீர்களோ அவ்வளவு கடினசூழல் கொடுத்து பழக்கப்படுத்துங்கள் அப்பொழுதுதான் உங்களது பிள்ளைகளுக்கு வாழ்வின் அர்த்தங்கள் பிடிப்படும் .
  • பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை பனிரெண்டு வயதுவரை தொலைக்காட்சி பார்க்க, கார்டூன் சேனல்களை காண அனுமதிக்காதீர்கள் . தாய்மொழியில் கல்விகற்க அனுமதியுங்கள் சுயசிந்தனை வளர்ச்சி அதிகரிக்கும் . பல்வேறு மொழிகளை தாய்மொழியின் மூலம் கற்றுகொடுங்கள் எளிதில் குழந்தைகளால் கற்க முடியும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Here article mentioned about parents role in students life.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+