நாட்டு நலத்திட்டங்கள் அவற்றின் பயன்கள்

நாட்டின் முக்கிய நலத்திட்டங்கள் அவற்றால் பயன் அடைவோர் விவரங்கள் அறிந்து கொள்வோம்.

By Sobana

மத்திய அரசினால் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் பற்றி அறிவோம்.
நலத்திட்டங்கள் அனைத்தும் நாட்டு நலனுக்காக கொண்டு வரப்படுபவை அவற்றின் பயனை மக்கள் அனுப்பவிக்க வேண்டும். அதன் மூலம் நாட்டு மக்களுக்கு அனைத்து தரப்பு நலனும் கிடைக்க வேண்டும்.

சுகன்யா சம்ரிதி அக்கௌண்ட் :

சுகன்யா சம்ரிதி அக்கௌண்ட் :

சுகன்யா சம்ரிதி அக்கௌண்ட் 2015 ஜனரி 22 அன்று துவக்கப்பட்டது இத்திட்டமானது 11 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்பு கனக்குகள் தொடங்குதல் ஆகும். ரூபாய் 1000 முதல் தொடங்கி 100 வரை அவ்வப்பொழுது பணம் செலுத்தி சேமிக்கலாம். அதிகபட்ச வரம்பாக ரூபாய் 1.5 லட்சம் செலுத்தலாம். இத்தொகைக்கு 9.2 சதவிகிதம் வட்டி வழங்கப்படும். இத்திட்டத்திற்கான  அதிகபட்சம் 21 ஆண்டுகள் ஆகும். பெண்களின் திருமணச் செலவு மற்றும் மற்ற படிப்பு செலவுகளுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

முத்ரா திட்டம் :

முத்ரா திட்டம் :

2015, ஏப்ரல்8 அன்று சுமார் 2000 கோடி மூலதனதுடன் துவங்கப்பட்ட திட்டமானது சுய தொழில் புரிபவர்களுக்கு நுண்கடன் மூலம் சிறுதொழில் நிறுவனங்கள் சில்லரை வர்த்தகம், மற்றும் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனி நபர்களுக்கு கடன் வழங்கும் நோக்கில் துவங்கப்பட்டது ஆகும்.

சிசு - ரூபாய் 50000 வரையிலான கடன்கள் பெறலாம்
கிசோர் - ரூபாய் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரையிலான கடன்கள் பெறலாம்
தருண் - ரூபாய் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் பெறலாம்.

கிஸான் பத்திரம் வெளியீடு :

கிஸான் பத்திரம் வெளியீடு :

அஞ்சல் நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விவாசாயிகள் ரூபாய் 1000 , ரூபாய் 5000, 10,000 வரை பல்வேறு தொகைகள் செலுத்தி அதற்கு சான்றாக பத்திரங்களை பெறலாம். முதலீடு செய்யப்படும் தொகைக்கு 8.7 % வீதம் வட்டி பெறலாம். இத்திட்டத்தின் குறைந்த பட்ச முதலீட்டு காலங்கள்  2 1/2 வருடங்கள் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டு தொகையானது 100 மாதங்களில் 8 வருடம் , 4 மாதம் இரண்டு மடங்காக திருப்பி அளிக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் :

ஸ்மார்ட் சிட்டி திட்டம் :

ஸ்மார்ட் சிட்டி திட்டம் இந்தியாவின் 100 முக்கிய நகரங்களை தேர்ந்தெடுத்து அந்நகரங்களை போக்குவரத்து, மின்வசதி, சுகாதாரம், நீர் மற்றும் மின்சாரம், துப்புரவு மேலாண்மை என்று சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அளிக்கப்படும். நிர்வாக இயக்குநர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இத்திட்டத்தின் கீழ் முதல் ஸ்மார்ட் சிட்டியாக புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் முதல் கட்டத்திற்கு தமிழகத்தின் கோவை, சென்னை, உள்ளிட்ட நாடு முழுவதும் 20 நகரங்களை தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் மூலம் இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாவதுடன் மின்னனு பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 

பேசட்டி பச்சாவோ பேட்டி பதாவோ:

பேசட்டி பச்சாவோ பேட்டி பதாவோ:

2015 ஆம் ஆண்டில் ஜனவரி 22 அன்று மகளை காப்போம் கற்பிப்போம் எனும் பொருள் கொண்ட திட்டம் பெண் குழந்தைகள் காப்பதையும் அவர்களுக்கு கல்வி அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டது

இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம் :

இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம் :

மத்திய சுகாதர மற்றும் குடும்ப நலத்துறையினரால் 2015 டிசம்பர் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் யுனிசெப் உலக சுகாதார நிருவனம் மற்றும் சர்வதேச ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றது.
குழந்தைகளை தாக்கி அவர்களின் மரணத்திர்கு வழிவகுக்கும் கக்குவான இருமல் மற்றும் டெட்னஸ், போலியோ, காசநோய், தட்டம்மை, ஹெப்டைட்ஸ் பி ஆகிய ஏழு நோய்களிலிருந்து குழந்தைகள் காக்க அவர்களுக்கு தடுப்பூசி போடுவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் காலஎல்லை 2020 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி திட்டத்தின்படி  அனைவருக்கும் வீடு :

பிரதம மந்திரி திட்டத்தின்படி அனைவருக்கும் வீடு :

2022 ஆம் ஆண்டில் நகர்புறங்களில் 2 லட்சம் வீடுகளையும், கிராமபுறங்களில் 4 லட்சம் வீடுகளையும் உருவாக்கும் இலக்கை கொண்டது குடிசைகள் மீட்பு மற்றும் குடிசைகளில் வசிப்போருக்கு புதிய வீடு கட்டித்தருதல் என்பதை நோக்கமாக கொண்ட இத்திட்டம் தனியார் மற்றும் பொதுத்துறை கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

பிரசாத் திட்டம் :

பிரசாத் திட்டம் :

2014 முதல் 2015 ஆம் ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட இது இந்திய மதங்ககளின் புனித ஸ்தலங்களை மேம்படுத்தி ஆன்மிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு திட்டமாகும்.

கேள்விகள்:

கேள்விகள்:

போட்டி தேர்வர்கள் அறிந்து கொள்ள வேண்டிய திட்டங்கள் அவற்றில் கேட்க வாய்ப்புள்ள கேள்விகள் தெரிந்து கொள்வோம். 

1. பிரசாத் திட்டம் எந்த ஆண்டின் பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்டது ?
2. அனைவருக்கும் வீடு செயல்படுத்த யாருடன் இணைந்து அரசு செயல்படுத்தும்?
3. இந்திரா தனுஷ் திட்டம் கொண்டு வரப்படட் நாள் எது?
4.  பேச்சி பச்சாவோ, பேட்டி பதாவோ என்னும் வாசகத்தின் பொருள் என்ன?
5. முத்ரா திட்டத்தில் வழங்கப்படும் தொகைகளை எழுதுக?
6. சுகண்யா சம்ரிதி திட்டகாலத்தில் எத்தனை ஆண்டுகள் கொண்டது ?

சார்ந்த பதிவுக:

இந்தியாவின் அதிவேக ரயில் செய்பாட்டிற்கு வைர நாற்கர ரயில்பாதை திட்டம் இந்தியாவின் அதிவேக ரயில் செய்பாட்டிற்கு வைர நாற்கர ரயில்பாதை திட்டம்

வரிகள் எவ்வாறு விதிக்கப்படுகின்றன இந்தியாவில் விதிக்கப்படும் வரிமுறை அறிவோம் வரிகள் எவ்வாறு விதிக்கப்படுகின்றன இந்தியாவில் விதிக்கப்படும் வரிமுறை அறிவோம்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
the article tells about welfare scheme of Government
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X