டிஎன்பிஎஸ்சியில் போட்டி தேர்வுக்கு செல்லும் அனைவருக்குமான தேர்வு குறிப்பு .தேர்வு ஆகஸ்ட் 6 ஆம் நாள் ஞாயிறு அன்று நடக்கவிருக்கிறது. இன்றிலிருந்து போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் படிப்பதை நிறுத்துங்கள் . குரூப் 2ஏ தேர்வுக்கு படிக்கும் அனைவரும் இறுதி நேரம் வரை படிப்பார்கள் அது எப்படி சாத்தியமெனில் இறுதி நேரம் வரை படிப்பவர்கள் ஏற்கனவே படித்ததை திரும்பி படிப்பார்கள் ஆதலால் அவர்களுக்கு 10 முறை படித்தது 11வது முறையாகும் .

தேர்வு நேரத்தில் புதிதாக படிப்பவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம் . தேர்வு அறையில் குழப்பம் வரும். தேர்வு நேரத்தில் புதிதாக படிப்பதை நிறுத்துங்கள். தேர்வு நேரத்தில் படப்படப்பு அதிகரிக்கும் நிலைக்கு யோசிக்க வேண்டாம். திறனுடன் படித்தால் மட்டும் போதாது அதனை பற்றி தெளிவான பார்வை வைத்து கொள்ள வேண்டும.
தேர்வு நேரத்தில் தமிழ், வரலாறு, அரசியலமைப்பு , கணிதம் மட்டுமே நன்றாக தெரியும் ஆனால் அறிவியல் தெரியாது என்றால் அதனை படிக்க வேண்டாம் . தேர்வு நேரத்தில் படிக்கும்போது முடிக்க வேண்டுமே என்ற கலக்கம் அதிகரிக்கும் . ஆகையால் தயவு செய்து மெனகெடாதீர்கள் தேர்வு நேரத்தில் மெனக்கெட வேண்டாம். நன்றாக படிக்கும் நீங்கள் உங்களுக்கு செய்த துரோகம் ஆகிவிடும். சுமார்ட் ஒர்க் செய்யுங்கள் போதுமானது ஆகும் . தேர்வுக்கு தொடர்ந்து படிக்கவும் ஆனால் படித்தை திருப்பி படிக்க வேண்டும் .
நன்றாக தூங்கி எழுந்திருங்கள் தேர்வுக்கு இரண்டு நாள் முன்பு படிப்பதை நிறுத்தி நன்றாக தூங்கி எழுங்கள் இதுவே போதுமானது ஆகும் . எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம் . மூளைக்கு நல்ல ஒய்வு கொடுங்கள் தேர்வை அது கவனித்துகொள்ளும் . ஆரோக்கியமான உணவுடன் அமைதியான சுற்றுசூழல் வைத்து கொள்ளுங்கள் அது மிகப்பெரிய வெற்றியாகும் .
சார்ந்த தகவல்கள்:


Click it and Unblock the Notifications












