தேர்வுகளின்போது நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது ஒவ்வொரு தேர்வருக்கும் அவசியமான ஒன்றாகிறது. தேர்வின் போது நேரமின்மை என்பது ஒரு மாணவனுக்கு மிகவும் சிரமமான விஷயங்களில் ஒன்று என்பதை அனைவரும் அறிவர்.
நேர மேலாண்மை என்பது நேரத்தை திறம்பட மற்றும் திறமையாக நிர்வகிப்பதற்கான செயல்முறையாகும், இதனால் ஒரு நபர் சரியான செயல்பாட்டைச் செய்வதற்கு சரியான நேரத்தை ஒதுக்க முடியும். எளிமையான சொற்களில், இது நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் திறன். நேர மேலாண்மை என்பது தனிநபர்கள் நேரத்தைப் பற்றி அதிகம் அழுத்தம் கொடுக்காமல் அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்ய அனுமதிக்கும் ஒரு திறமையாகும்.
தேர்வறை அல்லது தேர்வுக் கூட்டம் பெரும்பாலானவர்களுக்கு பதட்டம் தரும் இடமாக அமைந்து இருக்கிறது. தேர்வுக்காக சரியாக தயாராகாதவர்கள் மட்டுமல்லாது நன்றாக தயார் செய்து வந்தவர்கள் கூட தேர்வறைக்குள் நுழைந்ததும் தடுமாற்றம் அடைவதை நாம் காண முடியும்.
எல்லாம் தெரிந்த கேள்வியாகத்தான் இருந்தது, ஆனால் பதிலளிக்க நேரம் கிடைக்கவில்லை என்று தேர்வை எழுதி முடித்ததும் அங்கலாய்க்கும் மாணவர்கள் உண்டு. தேர்வறைக்குள் எப்படி நடக்க வேண்டும், நேரத்தை மீதம் பிடித்து வெற்றியை எப்படி தனதாக்க வேண்டும்? என்று கல்வியாளர்கள் இங்கே சில டிப்ஸ்களை வாரி வழங்கியுள்ளனர்.

1. பதட்டமின்றி நன்கு தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடை அளித்தால், கடைசியில் தெரியாத வினாக்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்ததை யோசித்து தெளிவாக விடை அளிக்க வேண்டும். தேர்வில் நேர மேலாண்மை அவசியம். தேர்வுக்கான அச்சம் தவிர்த்து, நிமிர்ந்த நடையுடன் அரசு தேர்வினை சந்திக்க மாணவர்கள் தயாராக வேண்டும், ஆண்டுதோறும் ஏராளமான போட்டித் தேர்வு அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகின்றன.
வேலைவாய்ப்புக்கான தேர்வு, மேற்கல்விக்கான நுழைவுத் தேர்வு, கல்வி உதவித் தொகை மற்றும் பணிகளுக்கான தகுதித் தேர்வு என தேர்வுகளின் பட்டியல் நீள்கிறது. ஆனால் இவற்றில் பெரும்பாலான தேர்வுகளில் 'ஆப்ஜெக்டிவ் டைப்' எனப்படும் கொள்குறி வகை வினாக்களே கேட்கப்படுகின்றன. இது எளிமையானது என்ற மனப்பான்மை பெரும்பாலானவர்களிடம் உண்டு. ஏனெனில் விடை தெரியாவிட்டால்கூட ஏதாவது ஒன்றை தேர்வு செய்து பதிலாக குறிப்பிட முடியும் என்று நினைக்கிறார்கள். நிச்சயமாக கொள்குறி வகை வினாக்கள் தரமான தேர்வு முறையாகும். நாம் சரியான விடை என்று நினைப்பதை குழப்புவதற்கென்றே அது தொடர்பான மற்ற விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதுவே நிறைய பேரை தடுமாறச் செய்துவிடும். எனவே கொள்குறி வினாக்களை நிதானமாக வாசித்து கவனமாக பதில் அளிக்க வேண்டும். மாணவர்கள் இந்த விஷயத்தில் அவசரப்படக்கூடாது.
2. மாணவர்கள் இந்த கொள்குறி வகை வினாக்களுக்கு பதில் அளிக்கும்போது பொறுமையாக செயல்படவேண்டும். அதே நேரத்தில் கொள்குறி வகை (Objective type questions) தேர்வு, சரியாக கேள்வியை புரிந்து கொண்டால் உடனே விடையை தேர்வு செய்ய வாய்ப்பாகவும் இருக்கும். எனவே நல்ல தயாரிப்பு நிலையுடன் சென்றால் தேர்வறையில் அதிகமான நேரத்தை நாம் மீதம் பிடிக்கலாம்.
3. இந்த வகை தேர்வுகளில் வினாக்களின் எண்ணிக்கை அதிகமாகவும், அளிக்கப்படும் நேர அவகாசம் குறைவாகவும் இருப்பதால் துரிதமாக செயல்படுவது அவசியம் என்பதை தேர்வர்கள் உணர வேண்டும்.
தேர்வுக்கு தயாராகும்போதே நேரம் மற்றும் வினாக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அப்படி கணக்கிட்டால் சில தேர்வுகளில் ஒரு வினாவுக்கு 10 முதல் 20 வினாடிகளே அவகாசம் கிடைக்கும். இந்த அவகாசத்தில் நன்றாக தெரிந்த வினாக்களுக்கே பதில் அளிக்க முடியும். எனவே தெரியாத வினாக்களில் யோசித்து நேரத்தை வீணடிப்பதைவிட தெரிந்த வினாக்களுக்கு பதில் அளித்துக் கொண்டே செல்வது சரியானதாக இருக்கும். இறுதியாக கிடைக்கும் அவகாசத்தில் தெரியாத வினாக்களுக்கு யோசித்து பதில் அளிக்கலாம்.

4. எதிர்மறை மதிப்பெண் (நெகட்டிவ் மார்க்) வழங்கும் தேர்வு முறை என்றால் உறுதியாக விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதை தவிர்த்து விடுவது உத்தமமாக இருக்கும்.
5 யோசித்து பதில் அளிக்க வேண்டிய வினாக்களுக்கு கடைசி 20 சதவீத நேரத்தை ஒதுக்கிக் கொள்ளலாம்.
6. விளக்கம் அளிக்க வேண்டிய தேர்வுகளில், விடைகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதப் பழக வேண்டியது அவசியம்.
7. தேர்வுகளில் படங்கள் வரைய வேண்டிய தேவை இருந்தால் அது பற்றிய பயிற்சியை பலமுறை செய்து பார்த்திருப்பது நல்ல பயனைத் தரும். படங்கள், விடை திருத்துபவரின் கவனத்தை உடனடியாக ஈர்ப்பதால் அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். குறிப்பிட்ட நேரமும் ஒதுக்க வேண்டும் என்பது சிறப்பு.
8. நுணுக்கமாக குழப்பம் தரும் வகையில் கேட்கப்படும் வினாக்களுக்கு நிதானமாக பதில் அளிக்க வேண்டியது அவசியம். சில பத்திகளில் தகவல்களை கொடுத்து அதில் இருந்து எடுக்கப்படும் வினாக்கள் இவ்விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.
9. பொருளை நன்றாக விளங்கிக் கொண்டு பதில் அளிப்பது சிறந்தது. இவை அதிக நேரத்தை வீணாக்கும் என்பதால் முடிந்தவரை இறுதியாக இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.
10. கணிதங்களில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் நேரத்தை எடுத்துக் கொள்ளும். சில வினாடிகளில் சிந்தித்து விடையளிக்கும் கணித வினாக்களுக்கு மட்டும் முதலில் விடையளித்துவிட்டு, படிமுறையில் விடை கண்டுபிடிக்க வேண்டிய வினாக்களுக்கு இறுதியில் பதில் அளிக்கலாம்.
11. தேர்வுகளில் அதிக ரேங்க் பெறுவது மிகவும் முக்கியமானது என்பதை மாணவர்கள் உணரவேண்டும். எனவே, தேர்வில் நேர மேலாண்மைக்கு சிறப்பாகத் தயாராக அதற்கான பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். உண்மையான தேர்வு நடைபெறுவதற்கு முன்பே இதற்கான உங்கள் தயாரிப்பைத் தொடங்க வேண்டும்.

12. தேர்வுத் தயாரிப்பின் போது திட்டமிடல் மிக முக்கியமான காரணியாகும். படிப்பதற்கான அட்டவணையை ஒழுங்கமைத்து உருவாக்குவது அவசியம். நீங்கள் மிகவும் முறையான முறையில் தேர்வுக்குத் தயாராகிச் சென்றால், அது கடைசி நிமிட நிச்சயமற்ற தன்மை மற்றும் குறைபாடுகளை நிராகரிக்கும். உங்களின் அனைத்து தேர்வுகளுக்கும் ஒரு படிப்பு அட்டவணையை உருவாக்கவும், மேலும் ஒவ்வொரு பாடத்திற்கும் சரியான நேரம் கொடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யலாம். தேர்வுக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன என்பதைச் சரிபார்த்து அதற்கேற்பத் திட்டமிடுங்கள். இதன்மூலம் தேர்வுக் கூடத்தில் நாம் சரியான வினாக்களுக்கு குறித்த நேரத்தில் விடையளிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
13. தேர்வுக் கூடத்தில் ஒவ்வொரு கேள்வியையும் எவ்வாறு கையாள்வது மற்றும் ஒரு கேள்விக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குவது என்பதற்கான உத்தியை முன்னதாகவே அவர்கள் வகுக்க வேண்டும். வெவ்வேறு பாடப்புத்தகங்களில் மாதிரி வினாத்தாள்கள் உள்ளன மற்றும் சிலவற்றை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தத் தாள்கள் பயிற்சிக்காக மட்டும் அல்ல, ஒரு மாணவராக உங்கள் நேரத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதைப் புரிந்துகொள்ள அவை உங்களுக்கு உதவும் , இதனால் எதுவும் தவறவிடப்படாது.
14. தேர்வுகளில் நீங்கள் வேகமாக எழுத பயிற்சி செய்தால், பெரிய தத்துவார்த்த கேள்விகளை எளிதாக சமாளிக்க முடியும். இதனால் அதிக மதிப்பெண் பெறமுடியும். மேலும் பிற கேள்விகளுக்குச் செல்ல சிறிது நேரத்தைச் சேமிக்கவும் முடியும். விரைவாகவும் தெளிவான கையெழுத்துடனும் எழுதுவது எப்படி என்பதை நீங்கள் உண்மையிலேயே கற்றுக்கொள்ள விரும்பினால் நிறைய பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். உங்கள் கையெழுத்து குழப்பமாக இருந்தால், சில மதிப்பெண்கள் குறைக்கப்படலாம். எனவே, விரைவாக எழுத உங்களால் முடிந்தவரை பயிற்சி செய்யுங்கள். தேர்வின் போது மற்ற கேள்விகளுக்கு ஒதுக்க சில கூடுதல் நிமிடங்களை நீங்கள் சேமிக்க முடியும்.
15. உங்கள் நேரத்தை நிர்வகிப்பதற்கான சிறந்த வழி, மாதிரித் தேர்வுகளுக்குத் தயாராவதாகும். இந்த மாதிரித் தேர்வுகள் ஆன்லைனில் எளிதாகக் கிடைக்கின்றன, மேலும் தேர்வின் தோற்றத்தையும் உணர்வையும் உருவகப்படுத்த உதவும். முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களை விடை எழுத முயற்சிக்கவும். இதன்மூலம் அந்த வினாத்தாள்களுக்கு எவ்வளவு நேரத்தில் நீங்கள் பதில் அளிக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
16. தேர்வறையில் உங்கள் கேள்வித்தாள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டதும், நேரத்தை வீணாக்காதீர்கள். முதலில் அதை முழுமையாகப் படிக்கவும். அப்போது அமைதியைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், மேலும் நீங்கள் நினைவில் கொள்ள முடியாத சில வினாக்கள் இருந்தால் பீதி அடைய வேண்டாம். வினாத்தாளை சரியாகப் படிப்பதன் மூலம், அனைத்து கேள்விகளையும் சரியான நேரத்தில் சமாளிப்பதற்கான சிறந்த நேர மேலாண்மையை உருவாக்க உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.
17. அதிக நேரம் தேவைப்படும் கேள்விகளை கடைசியாக எழுதுங்கள். எளிதில் தீர்க்கப்பட கூடிய கேள்விகளுக்கு முதலில் பதில் அளியுங்கள். எளிதான கேள்விகளை முதலில் எழுதுவதால் நேர மேலாண்மையை கடைப்பிடிக்க முடியும். நேரத்தை சேமிக்கவும் முடியும். இதன்மூலம் கடினமான மற்றும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் கேள்விகளுக்கு பின்பகுதியில் விடையளிக்கலாம். அப்போது உங்களுக்கு கூடுதல் நேரமும் கிடைக்கும்.
18. சில நேரங்களில், உங்களுக்கு பதில் தெரியாத சில கேள்விகள் இருக்கலாம். பதில்களை எழுதினால் மதிப்பெண்கள் கிடைக்காது என்பதால் இதுபோன்ற கேள்விகளைத் தவிர்க்க முயற்சி செய்யவேண்டும்.
உங்களுக்குத் தெரியாத விஷயங்களுக்குப் பதிலளித்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். தேர்வில் பயனுள்ள நேர மேலாண்மை என்று வரும்போது , உங்களுக்குத் தெரிந்ததைக் கடைப்பிடித்து, முடிவில் பதிலளிக்க முடியாத கேள்விகளுக்கு விடை காண முயலுங்கள்.
19. எந்தவொரு கேள்வியையும் எழுதுவதற்கு முன், நீங்கள் என்ன எழுதப் போகிறீர்கள் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். கேள்விக்கான பதிலை எழுதும்போது நீங்கள் நினைவில் வைத்திருக்கும் விஷயங்களைச் சுற்றி உங்கள் பதிலை உருவாக்க முயற்சிக்கவும்.
20. தேர்வுக் கூடத்தில் மாணவர்கள் நேர மேலாண்மையைக் கடைப்பிடிப்பது அவசியம். தேர்வுக் கூடத்தில் இந்தக் குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால், தேர்வின் போது உங்கள் நேரத்தை திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்வு நேரத்திலோ விடைகளை எழுதும்போது நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது நல்லது.
நேர மேலாண்மையைக் கடைப்பிடித்து விரைவாக தேர்வை எழுதி முடிக்கும்போது கடைசி நேரத்தில் விடைகளை நாம் சரியாக எழுதி இருக்கிறோமா என்பதை சரிபார்க்க முடியும்.
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்களே..!


Click it and Unblock the Notifications












