நாட்டில் உள்ள பெரும்பாலான மாணவ, மாணவிகளுக்கு தாங்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் போன்ற குடிமைப் பணிகளில் தேர்வு பெற்று நல்ல பதவியில் அமரவேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவது பல ஆர்வலர்களின் மிகப்பெரிய கனவு, ஆனால் ஒரு பெரிய கனவுக்கு பெரிய முயற்சிகள் தேவை என்பதை தேர்வர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சிவில் சர்வீசஸ் தேர்வில் (சிஎஸ்இ) குறிப்பிடத்தக்க அகில இந்திய தரவரிசையைப் பெறுவது மிகவும் சவாலானது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான யுபிஎஸ்சி விண்ணப்பதாரர்கள் நாட்டின் கடினமான தேர்வுகளில் ஒன்றை எழுதுகிறார்கள், ஆனால் ஒரு சிலரே அதை முறியடிக்க முடிகிறது.
எனவே, கவனத்துடன் தேர்வுக்குப் படித்து எழுதினால் அதில் நாம் வெற்றி காண முடியும்.
தேர்வுக்குத் தயாராவதற்கு முன்பு யுபிஎஸ்சி தேர்வு பற்றிய ஒரு சிறிய அறிமுகம் இதோ.....
இந்திய அரசின் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission - UPSC), ஆண்டுதோறும் 24 வகையான இந்தியக் குடியியல் பணிகளுக்கு அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வினை (Civil Services Examination - CSE) நடத்துகிறது.
1. இந்தியக் குடிமகன், 2. நேபாளக் குடிமகன் அல்லது பூட்டான் குடிமகன், 3. ஜனவரி 1, 1962-ம் நாளுக்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய திபெத்திய அகதிகள், 4. இந்தியாவில் நிரந்தரமாகக் குடியேறும் நோக்கத்துடன் பாகிஸ்தான், மியான்மர், இலங்கை, கென்யா, உகாண்டா, தான்சானியா, சாம்பியா, மலாவி, ஜைர், எத்தியோப்பியா அல்லது வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தேரவை எழுதத் தகுதி பெற்றவர்கள்.

கல்வித் தகுதி:
இத்தேர்வு எழுதிட விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து ஏதாவதொரு பட்டத்தைப் (10+2+3) பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் விண்ணப்பிக்கும் ஆண்டில் ஆகஸ்ட் முதல் நாளில் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 32 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகள் தளர்வுடன் 35 வயதுக்கு அதிகமாகாமலும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகள் தளர்வுடன் 37 வயதுக்கு அதிகமாகாமலும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகள் தளர்வுடன் 42 வயதுக்கு அதிகம் ஆகாமலும் இருக்க வேண்டும். வயதுச் சான்றிதழுக்கு மெட்ரிக் அல்லது மேல்நிலைப்பள்ளிச் சான்றிதழ் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதையும் மாணவர்கள் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தனித்தேர்வு கிடையாது
ஐஏஎஸ் படிப்புக்கு என்று என்று தனி தேர்வு எதுவும் இல்லை, இந்தியா குடிமை பணிகள் தேர்வாணையம் நடத்தும் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் IAS பணி பெறலாம்.
UPSC Civil service exam ஆண்டிற்கு ஒரு முறை இந்த தேர்வை நடத்தும். இந்த தேர்வு மூன்று நிலைகளில் இருக்கும்,
1)முதல் நிலை தேர்வு (preliminary exam objective type questine). இந்த தேர்வின் மதிப்பெண்கள் தரவரிசை மதிப்பெண்களின் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே முதன்மை தேர்வு எழுத முடியும். இந்த தேர்வு பெரும்பாலும் மே மாதம் இறுதியில் நடைபெறும், அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும்.
2) முதன்மை தேர்வு (Mains exam essay type) இந்த தேர்வு September மாதம் நடைபெறும். இந்த தேர்வில் ஒன்பது தேர்வு இருக்கும். ஒவ்வொன்றும் 250 மதிப்பெண்கள்.
1 )மொழிப்பாடம் இந்திய மொழிகள் எதாவது ஓன்று (தமிழ் )
2) ஆங்கிலம்.
3) ESSAY.
4) GS PAPER 1.
5) GS PAPER 2.
6)GS PAPER 3.
7) GS PAPER 4.
8 ) விருப்ப பாடம் 1.
9) விருப்ப பாடம் 2.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்விற்கு அழைக்கப் படுவார்கள் , இந்த தேர்வு இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும்...
இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 22 வகையான பணிகள் உள்ளன, தரவரிசை அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படும்.
தரவரிசையில் முதல் 50 அல்லது 100 இடங்களில் இருந்தால் நமது விருப்பப்படி IAS, IPS, IFS, போன்ற பணிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
மொழிபாடங்கள் தமிழ், மற்றும் ஆங்கிலத்தில் குறைந்த பட்சம் 25% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறவேண்டும்.அப்படி தேர்ச்சி பெற்றால் மற்ற 7 பாடம் தாள்கள் திருத்தப்படும்....
மொழிப்பாடங்கள் தவிர Essay 250, GS1-250, GS2-250, GS3-250, GS4-250, விருப்பப்பாடம் 1-250,
விருப்பப்பாடம் 2-250 என மதிப்பெண் வழங்கப்படும்.
மொத்தம் 1750 மதிப்பெண், இவற்றில் upsc நிர்ணயிக்கும் cut-off mark பெற்றால் நேர்முக தேர்வுக்கு அழைக்க படுவார்கள். Cut-off mark தேர்வு எழுதிய ஆண்டில் வெளியிடப்படும்..
இறுதியில் நேர்முகத்தேர்வு 275 மதிப்பெண்..
மெயின்-இன்டர்வியூ (Mains - Interview) தேர்வுகளில் பெரும் மதிப்பெண்கள் கொண்டு தரவரிசை வெளியிடப்படும்.
தர வரிசையில் நமது பெயர் இருந்தால், பெற்ற மதிப்பெண்கள் படி பணி தரப்படும்.. தரவரிசையில் நமது பெயர் இல்லை என்றால் மறுபடியும் முதல் இருந்து தொடங்க வேண்டும்.
இந்த மூன்று நிலைகளில் எதில் தோல்வி அடைந்தாலும் மறுபடியும் முதலில் இருந்தே தொடங்க வேண்டும்

தேர்வுக்கான தயாரிப்பைத் தொடங்குவது எப்போது?
இந்தத் தேர்வில் ஆர்வமுள்ளவர்கள் இதற்கான படிப்பை எப்போது தொடங்கலாம் என்று கேட்கிறார்கள்.
கல்லூரியின் இறுதி ஆண்டுகளில் மாணவர்கள் தங்கள் வாய்ப்புகளை ஆராய்ந்து, இந்த வலிமையான சவாலுக்குத் தேவையான முயற்சிகளை எடுப்பது சரியாகும்.
கல்லூரி படிக்கும்போதே இதற்குத் தயாராகிவிடுவது நல்லது.
தேர்வுக்கான நேர மேலாண்மை
யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கான நேர மேலாண்மை ஒரு முக்கியமான அம்சமாகும். ஆர்வலர்கள் தங்கள் நேரத்தை திறம்பட நிர்வகிக்க உதவுவதற்காக "நேர மேலாண்மை சூத்திரம்" என்றழைக்கப்படும் 7 நாள் மின்னஞ்சல் பாடத்திட்டத்தை வடிவமைத்துக் கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு நாளும் எந்தெந்த பாடங்களை எத்தனை மணி நேரம் படிக்கவேண்டும் என்பதை அட்டவணைப் படுத்திக் கொள்வது நல்லது.
முக்கிய அம்சங்கள்:
யதார்த்தமான எதிர்பார்ப்புகள்:
உங்கள் வரம்பு எதுவரை இருக்கிறது என்பதை நீங்கள் சுய ஆய்வு செய்து ஒப்புக் கொள்ளுங்கள் மற்றும் உங்கள் திறன்களை மிகைப்படுத்தாதீர்கள்.
ஆற்றல் மேலாண்மை:
அதிக ஆற்றல் உள்ள காலங்களில் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து படித்தல் வேண்டும்.
பணி-அமைப்பு:
ஒவ்வொரு நாளும் ஒரு சவாலை வழங்கக் கூடிய பாடத்தைத் தேர்வு செய்து படிக்கவேண்டும். மேலும் அடையக்கூடிய சில உயர்-முன்னுரிமை இலக்குகளை மட்டும் திட்டமிடுவது அவசியம்.
முக்கியமான நடவடிக்கைகள்:
போதுமான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி உட்பட மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுத்து படிக்கவேண்டும்
ஆழ்ந்த கவனம்:
கவனம் செலுத்துவதற்கான உங்கள் திறனைப் பயிற்றுவிக்கவும், கவனச்சிதறல்களைக் குறைக்கவும், ஆழ்ந்த கவனம் செலுத்தி படித்தல் நல்லது. குறிப்பாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
சிவில் சர்வீஸ் மெயின் போன்ற தேர்வில், பாடத்திட்டத்தைப் படிப்பது மட்டும் முக்கியமல்ல, தேர்வு எப்படி எழுதுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். தேர்வுக்கு முன் எவ்வளவு படித்தாலும், மூன்று மணி நேரத்திற்குள் எவ்வளவு திறமையாக விடைகளை எழுதுகிறீர்கள் என்பதுதான் ஒருவரை டாப்பர் ஆகவும், இன்னொருவரை தோல்வியடையவும் செய்கிறது. எனவே பதில் எழுதும் வழக்கமான பயிற்சி மிகவும் அவசியம். யுபிஎஸ்சி (UPSC) உங்களை மதிப்பிடுவதற்கு முன் உங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்வது சரியானதாகும். இதற்கு சரியான பகுப்பாய்வு பதில்களை எழுதக் கற்றுக்கொள்வது அவசியமாகும்.

படிப்புக்குத் தேவையான புத்தகங்கள்
யுபிஎஸ்சி தேர்வின் ஆரம்ப நிலைக்கு அனைத்துவிதமான என்சிஇஆர்டி(NCERT) பாடப்புத்தகங்களையும் குறைந்தது இரண்டு முறையாவது முழுமையாகப் படிக்க வேண்டும். இது தேர்வுக்கு நீங்கள் சிறப்பாகத் தயாராவதை உறுதி செய்யும். மேலும், நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படித்த அவசியம்.
ஆன்-லைனில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. அவைத் தேர்வு செய்து படிக்கவேண்டும்.
பொதுவான சவால்களை சமாளித்தல்
யுபிஎஸ்சி தேர்வுக்கான பயணம், பரந்த பாடத்திட்டம், பல அறிவாற்றல் கோரிக்கைகள், நிச்சயமற்ற தன்மை மற்றும் மனநலப் பிரச்சினைகள் உள்ளிட்ட சவால்களால் நிறைந்துள்ளது.
எனவே, மாணவர்கள் அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற வேண்டும். தியானம், உறுதிமொழிகள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுதல் போன்ற நுட்பங்களுடன் மன ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
மாதிரித் தேர்வுகள்
நீங்கள் தேர்வுக்கு எந்தவிதம் தயாராகி உள்ளீர்கள் என்பதை மாதிரித் தேர்வுகள் மூலம் நீங்கள் கணக்கிட முடியும். முந்தைய ஆண்டுகளின் யுபிஎ்சி தேர்வுக்கான வினாத்தாள்கள் முக்கியத்துவம் வாய்ந்தது.
மாதிரித் தேர்வுகளை அடிக்கடி எழுதிப் பார்க்கலாம். இந்தத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களால் மாணவர்கள் மனமுடைந்து போக வேண்டாம்.
மூன்று ஆலோசனைகள்
1. நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களில் இருந்து படித்ததைக் கொண்டு உறுதியாக இருக்க வேண்டும். தேர்வில் தோற்று விடுவோமோ என்ற பயத்துக்கு ஆளாக வேண்டாம்.
2. திட்டமிட்டுப் படித்து பொறுப்பாக இருந்து தேர்வுகளை அணுகவேண்டும்.
3. யதார்த்தமான எதிர்பார்ப்புகளை கொண்டு, யுபிெஸ்சி தேர்வுக்குத் தயாராகும் பயணத்தைத் தொடங்கவேண்டும். பரீட்சைக்குத் தொடர்ந்து தயாராவதற்கு அர்ப்பணிப்பு, விதிவிலக்கான மன உறுதி மற்றும் நிலையான ஊக்கம் தேவை. எனவே ஒருவர் எப்போதும் நம்பிக்கையுடனும் உள்நோக்கத்துடனும் இருக்க வேண்டும்.
தேர்வர்கள் முதலில் தேர்வு முறையைப் புரிந்துகொண்டு பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தலைப்புகளின் கருத்துகளையும் தெளிவுபடுத்த வேண்டும். தேர்வில் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் துல்லியமாக பதிலளிக்க அவர்கள் செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும். இதன்மூலம் நாம் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். தொடர்ந்து முயற்சி செய்யும்போது தேர்வர்களுக்கு அது எளிதாகிவிடும்.


Click it and Unblock the Notifications












