சீனா மற்றும் தென் கொரியாவிருக்கு அடுத்தபடியாக இந்தியா மாணவர்கள்தான் அதிகமாக வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்றனர்.
ஒரு வருடத்திற்கு 150000 மாணவர்கள் பல்வேறு படிப்புகளில் பல்வேறு பட்டம் பெற வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இந்திய மாணவர்கள் ஜெர்மனி, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு செல்கின்றனர். மேலும் ஆஸ்த்ரேலியா, சிங்கபூர், துபாய், நியூசிலாந்து ஆகிய நாடுகளும் நம் மாணவர்களுக்கு ஏற்ற இடங்களாக உள்ளன.
லச்சக்கணக்கில் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்றனர். அதில் அதிகமானோர் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் இவற்றை கற்க செல்கின்றனர். இருந்த போதிலும், கடந்த சில ஆண்டுகளாக வணிகம் கற்கவும்,கலை துறையில் பட்டம் பெறவும், ஊடகம் பற்றி படிக்கவும் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இந்த போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது, காரணம், இந்தியாவின் மத்திய குடும்ப சூழல் தொடர்ந்து முன்னேற்றம் காண்பதுதான்.
கட்டணங்கள் :
அமெரிக்காவில் கல்வி பயில 25000$ முதல் 70000$ வரை செலவாகும். எந்த விதமான பல்கலைகழகத்தை நீங்கள் தேர்வு செய்வீர்கள் என்பதை பொறுத்து இது மாறுபடும்.
பல பல்கலைகழகங்கள் நீங்கள் படிப்பதற்கு உங்களுக்கு நிதியுதவியும் அளிக்கின்றன. அங்கு நீங்கள் படித்த படியே கற்பிக்கவும், ஆய்வுகளிலும் ஈடுபட்டால் இந்த தொகை அதிகமாகவும் கிடைக்கும்.
அமெரிக்காவில் 4,000 அதிகமான கல்லூரிகள் உள்ளன. எனவே அங்கு ஏற்படும் செலவானது எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை.
பிரிட்டனில் நீங்கள் பயில ஒரு வருடத்திற்கு $20,000-$50,000 வரை செலவாகும். இது உங்கள் பல்கலைகழகம், நீங்கள் இருக்கும் இடத்தை பொறுத்து வேறுபடும். சில படிப்புகள் மற்ற படிப்புகளை விடவும் அதிக கட்டணம் கொண்டதாக இருக்கலாம்.
நிதித்தேவைகளை எதிர்கொள்ள கல்விகடன் :
வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்கள் சந்தை வருடாவருடம் 12% உயரும் என்று கணிக்கப்படுள்ளது.
அப்படி செல்லும் மாணவர்களுக்கு உதவுவதற்காக பல வங்கிகள் அவர்களுக்கு ஏற்ற விதத்தில் பல சலுகைகளை கொண்ட கடன் திட்டங்களை வகுத்துள்ளனர்.
எந்த நாடு, எந்த பல்கலைகழகம், என்ன படிப்பு இவற்றை பொறுத்து அதற்கு ஆகும் செலவு மாறுபடும். எந்த நாட்டிற்கு செல்லுகிறோமோ அதற்கு ஏற்ப கடன் திட்டங்களையும் வங்கிகள் வகுத்துள்ளனர். இதன் மூலம் நன்கு படிக்கும் மாணவர்கள் அவர்கள் கனவுகளை எளிதாக நிஜமாக்க முடிகிறது.
பல்வேறு கடன் திட்டங்கள் வங்கிகளில் உள்ளன. அவற்றின் வட்டிவிகிதம் மாறுபடுகின்றது. எனவே பல்வேறு வங்கிகளை ஒப்பிட்டு பார்த்து பின்பு கடன் பெறுவது நன்று.
பொதுத்துறை வங்கிகள் குறைந்த வட்டிவிகிதத்தில் கடன் தருகின்றன. 11% and 14%, வரை விகிதம் மாறுபட்டாலும், பின்னர் மாறும் தன்மையில் தான் தரப்படுகின்றது. அதிகம் ஆகலாம், குறையவும் செய்யலாம். எனவே கடன் வாங்கும் முன் மனதில் கொள்ளவேண்டியவை :
1.மார்ஜின் தொகை:
ரூ.4 லட்சத்திற்கும் அதிகமாக கடன் பெற்றால் நீங்க மார்ஜின் தொகை செலுத்த வேண்டியது இருக்கும். உங்கள் கடன் தொகையில் 15% மார்ஜின் தொகையாகும்.
2. பிணை:
7.5 லட்சத்திற்கும் அதிகமாக நீங்கள் கடன் பெற்றால், அதற்கு பிணையாக எல்ஐசீ பாலிசியோ அல்லது உங்கள் வசம் உள்ள அசையா சொத்தையோ வைக்கவேண்டும்.
3.கடன் விகிதம்:
நீங்கள் கேட்டதைவிடவும் குறைந்த அளவில் உங்களுக்கு கடன் கிடைக்கலாம். காரணம் அந்த நேரத்தில் உள்ள டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு.
4. எப்போது கடனை திருப்பி செலுத்த துவங்க வேண்டும்:
படிப்பு முடிந்து சில காலம் நீங்கள் கடனை திருப்பி கட்டவேண்டிய அவசியம் இல்லை. அது வேலை கிடைக்கும் வரை அல்லது சில மாதங்கள் என கணக்கு இருக்கும்.
ஒவ்வொரு வங்கியை பொறுத்தும் இது வேறுபாடும். அந்த காலம் முடிந்த பிறகு நீங்கள் கடனை திருப்பி செலுத்த துவங்க வேண்டும்.
5. கேவைசீ:
கேவைசீ (நோ யுவர் கஸ்டமர்) எனப்படும் வங்கியின் முன்னேற்பாடுகளை தேவையான பத்திரங்கள் கொடுத்து நீங்கள் முடிக்க வேண்டும்.
தகுதி:
1. விண்ணப்பிப்பவர் இந்தியராக இருத்தல் அவசியம். வயது 18 முதல் 35 வரை இருக்கலாம். இணை விண்ணப்பதாரர்களும் இந்தியர்களாக இருத்தல் அவசியம்.
2. இணை விண்ணப்பதாரர்களுக்கு இந்தியாவில் வங்கிகணக்கு இருப்பது அவசியம்.
3. கல்லூரியில் இடம் கிடைத்ததற்கான சான்றினை கொடுக்கவேண்டும்.
4. வங்கியின் விதிகளுக்கு ஏற்ற வகையில் விண்ணபதாரரின் வரவு செலவு கணக்கு இருத்தல் அவசியம்.
5. இணை விண்ணப்பதாரர், இந்தியாவில் சம்பாதிப்பவராக இருத்தல் அவசியம்.
6. விண்ணப்பதாரர் மற்றும் இணை விண்ணப்பதாரர் அவர்களுக்கு இடையில் உள்ள உறவு முறையை நிரூபித்தல் அவசியம்.
7. இணை விண்ணப்பதாரரின் வருமானத்தை பொறுத்து கடன் கிடைக்கும் தொகை அமையும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
கல்விக்கடன் "வெளிநாட்டில் படிப்பு" என்ற வகையில் அளிக்கபடுகின்றது. அதில் பல நாடுகள் அடங்கும். எந்த நாடு என்று தீர்மானிக்கும் முன்னரே ஒருவர் கடன் கேட்டு விண்ணபிக்கலாம். நீங்கள் செல்லும் நாட்டிற்கு ஏற்ற வகையில் உங்களது கடன் மாற்றியமைக்கப்படும்.
இந்திய ரூபாயில் தான் கடன் கொடுக்கப்படும். இந்திய ரூபாயில் தான் திரும்ப பெறப்படும். நீங்கள் படிக்கும் படிப்பு, அதற்கு ஆகும் கால அளவு, இவற்றை கல்விகடன் கணக்கில் கொள்ளும்.
இணை விண்ணப்பதாரர் மற்றும் விண்ணப்பதாரரின் கடன் கட்டும் திறன் பொறுத்தும், பயிலப்போகும் கல்வியின் எதிர்காலம் பொறுத்தும் மாறுபடும்.
பெரும்பாலும் வங்கிகள் கடன் தொகையை நேரடியாக கல்லூரிகளுக்கே செலுத்திவிடுகின்றன. அந்த கல்லூரியை பொறுத்து, சிறிது சிறிதாக பணம் செலுத்தப்படுகின்றது.
பிணையாக வீடு, விவசாயம் செய்யப்படாத நிலம், வங்கியில் வைக்கப்படுள்ள தொகை இவற்றை ஏற்கின்றன.
எந்த செலவுகள் உள்ளடங்கும் :
கல்விக்கட்டணம், தங்கும் விடுதிக்கட்டணம், பயணத்தொகை, பரிட்சை தொகை, நூலகம், ஆய்வகம், புத்தகம், உடுப்பு, தேவையான கருவிகள், கணினிகள் என அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு பின்னர் முடிவெடுகப்படுகின்றன. இதில் நீங்க பயணம் செல்ல ஆகும் தொகையும் சில வங்கிகளில் உள்ளடங்கும்.
நன்மைகள்:
மாணவர்கள், கல்விகடனை மேலாண்மை, பொறியியல், மருத்துவம், அல்லது கலை, அறிவியல், கட்டிக்கலை, உணவக மேலாண்மை என பல்வேறு துறைசார்ந்த பட்டப்படிப்பு . பட்டமேற்படிப்பு ஆகியவற்றிற்கும் விண்ணபிக்கலாம். 5% to 15% மார்ஜின் தொகையாக நிர்ணயம் செய்யப்படும். பொருளாதார வகையில் பின்தங்கிய வகுப்பு மாணவர்களுக்கு இந்திய அரசு, வட்டித்தொகையில் சலுகைகள் கொடுக்கின்றது.