உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதி தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வாழ்ந்த புனிதர் இயேசுவின் பிறந்த நாளே தற்போது கிறிஸ்துமஸ் என உலகம் அறிய கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்றைய தினம் கிறிஸ்துமஸ் தினத்தைக் சிறப்புறக் கொண்டாடும் வகையில் ஒருவருக்கு ஒருவர் பரிசுப் பொருட்களை பறிமாற்று தங்களது அன்பை வெளிப்படுத்திக்கொள்வர். குழந்தைகளுக்குப் பிடித்த பொருட்களை பரிசாக வழங்குவர். அந்த வகையில் வரும் கிறிஸ்துமஸ் விழாவிற்காக உங்க குழந்தைகளுக்கு என்ன பரிசுப் பொருட்களை வாங்கலாம் என்று பார்க்கலாம் வாங்க!
கிறிஸ்துமஸ் தாத்தா
கிறிஸ்துமஸ் என்றவுடன் நம் நினைவுக்கு முதலில் வருவது கிறிஸ்துமஸ் தாத்தா தான். "சாண்டா கிளாஸ்" எனும் கற்பனை கதாபாத்திரமே கிறிஸ்துமஸ் தாத்தா ஆவார். குழந்தைகளிடம் விருப்பம் அதிகம் கொண்டிருந்த செயின்ட் நிக்கோலஸ் தான் உன்மையாகக் கிறிஸ்துமஸ் என வரலாறு கூறுகிறது. இன்றும் பண்டிகை காலத்தில் இந்த கிறிஸ்துமஸ் தாத்தா தோன்றி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிப்பார் என நம்பப்படுகிறது.
கிறித்துமசுக்கு ஏற்ற பரிசுகள்
பரிசுகளின்றி கிறிஸ்துமஸ் விழா நிறைவடையாது. கிறிஸ்துமஸ் ஈவ் என்பது கிறிஸ்துமஸ்க்கு முந்தைய நாளாகும். இந்த நாளிலேயே இயேசு கிறிஸ்து பிறந்தார். டிசம்பர் 24 அன்று ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொள்வர். குறிப்பாக, இன்றைய நாளில் கிடைக்கும் பரிசுப் பொருட்களுக்காக குழந்தைகள் மிகவும் ஆவலாகக் காத்திருப்பர்.
என்ன கிஃப்ட் கொடுக்கலாம்?
நாம் நமது குழந்தைகளுக்கு கொடுக்கும் பரிசுகள் அவர்களுக்குப் பிடித்ததாகவும், அதே சமயம் அவர்களின் திறமையை வளர்க்கும் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
வீட்டை அலங்கரியுங்கள்
கிறிஸ்துமஸ் தினத்தன்று வண்ண விளக்குகள், குடில், கிறிஸ்துமஸ் மரங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு குழந்தைகளுடன் இணைந்து வீட்டை அலங்கரிப்பதன் மூலம் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவர்.
குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் பரிசுகள்
கதைகள், ஓவியம், கிராஃப்ட் போன்றவற்றில் உங்கள் குழந்தைகள் ஆர்வம் உள்ளவர்களா? அப்படியென்றால் அவர்களுக்கான கதை புத்தகத்தைப் பரிசளிக்கலாம். ஓவியத்திற்கு ஏற்ப வன்ன பலகை, ஸ்கெட்சிங் புத்தகங்களைப் பரிசாக வழங்கலாம். கிராஃப்ட், பசுல் பாக்ஸ், எண் விளையாட்டு, புதிர் விளையாட்டு போன்றவற்றைப் பரிசாக பரிசளியுங்கள்.
விளையாட்டுப் பொருட்கள்
விளையாட்டில் ஆர்வம் உள்ள சிறுவர்கள், குழந்தைகள் என்றால் அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுக்கான பொருளை பரிசளிப்பதன் மூலம் நிச்சயம் உங்களது குழந்தை மகிழ்ச்சியடையும். செஸ், டென்னிஸ், கிரிக்கெட் என அவர்களுக்கு ஏதேனும் விளையாட்டுக்கு தேவையான பொருட்களை கிஃப்டாக வாங்கி தரலாம்.