இந்திய இராணுவத்தில் பணியாற்றியோரின் வாரிசுகளின் கல்விக்கு அத்துடன் அவர்கள் மாற்றுதிறனாளி மாணவர்களெனில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த கல்வி உதவித்தொகையை பெற நுறு சதவீதம் இயற்கையாக பாதிக்கப்பட்ட குழந்தைகள், இந்திய ஆர்மியில் பணியாற்றியோரின் குழந்தைகள் கேந்திர வித்யாலயாவின் கல்வி உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
தேசிய பாதுகாப்பு படையில் வேலை செய்த ஹாவில்தார், நேவி, வான்ப்படையினர்களின் குழந்தைகளுக்காக விண்ணப்பிக்கலாம். மேலும் அவர்கள் மாற்றுதிறனாளியாக இருக்க வேண்டும். மேலும் இறந்த இராணுவ வீரர்களின் மனைவி தன் மகன் மற்றும் மகளுக்காக விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கும் குழந்தை பெறும் முதல் உதவித்தொகையாக இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் குழந்தை ஜில்லா பரிஷித்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளமான கேந்திர சைனிக்கில் மேலும் தேவையான தகவல்களை பெறலாம். கேந்திர சைனிக்கின் அதிகாரப்பூர்வ இணைய தள இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். அதிகாரப்பூர்வ இணைய த்தில் பெயர் முகவரி, படிக்கும் வயது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக பூர்த்தி செய்திருக்க வேண்டும் .
விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மாதரம் 1000 வழங்கப்படும் . கேந்திர சைனிக்கின் கல்வி உதவித் தொகையை பெற ஜில்லா பரிசித் ஆபிசர் அங்கிகரித்திருக்க வேண்டும். நூறு சதவிகித மாற்று திறனாளி சான்றிதழ் இராணுவ மருத்துவ மணை அல்லது அரசு மருத்துவமணையில் பெறலாம். அத்துடன் புகைப்படம் போன்ற தகவல்களை முறையாக சமர்பிப்பதுடன் வங்கியின் கணக்கு எண் போன்ற தகவல்களை முறையாக வழங்க வேண்டும். கல்வி உதவித் தொகை பெற டிசம்பர் 31, 2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சார்ந்த பதிவுகள்: