மாணவர்களுக்கான ஜவஹர் நவோதயா வித்யாலயா கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ளது. கிரமப்புற திறமைவாய்ந்த மாணவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
ஜவஹர் நவோதயா வித்யாலயா மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மிகுந்த தரமானதாக மாணவர்களுக்கு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
தகுதிகள் :
ஜவஹர் நவோதயா திட்டத்தின் கீழ் மாணவர்கள் பெற அரசு மற்றும் அரசால் அங்கிகரிக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்கள் ஐந்தாவது படித்து கொண்டிருக்க வேண்டும்.குறிப்பிட்ட திட்டம் நடைமுறையிலுள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
மாணவர்கள் மூன்றாவது தேர்ச்சி பெற்று நான்காம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு மூலம் தேர்வாகும் மாணவர்களுக்கு கல்வி தங்குவதற்கும் படிப்பதற்கான உதவியை அரசு செய்யும்.
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் மே1 2005லிருந்து ஏப்ரல் 30 2009க்குள் பிறந்திருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு முழுவதும் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் பள்ளிகளிலேயே படிக்க வேண்டும்.
தகுதிபெறும் மாணவர்கள் :
ஜவஹர் நவோதயா திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் 75% குழந்தைகளுக்கான திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண் குழந்தைகளாக இருக்க வேண்டும். மேலும் மூன்று சதவிகித குழந்தைகள் மாற்றுதிறனாளி மாணவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பிரிவை சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும்.
சார்ந்த பதிவுகள் :
கேந்திர சைனிக்கின் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை
தேர்வு நடக்கும் நாட்கள் அறிவிப்பு
ஜவஹர் நவோதயா சம்மர் திட்டமானது பிப்ரவரி 2018
ஏப்ரல் 8 நவதோயா விண்டர் வித்யாலாயா திட்டம் 2018
சம்மர் மற்றும் எக்ஸ்ட்ரீம் விண்டர் வித்யாலயா ஜூன் 9, 2018
விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். தேவையான சான்றிதழ் இணைப்புகளை இங்கு கொடுத்துள்ளோம். மாணவர்கள் அதனை பயன்படுத்தி கொள்ளலாம். கிராமப்புற மாணவர்களுக்கான இந்த வாய்ப்பை தேவைப்படுவோர்க்கு பகிர்வதன் மூலம் வசதி வாய்ப்பற்ற குழந்தைகள் கல்வி பயில வாய்ப்பாக இருக்கும் . விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை இணைத்து பதிவுசெய்தலுடன் கல்வி உதவித்தொகை பெறலாம் . நவம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சார்ந்த பதிவுகள் :