மாணவர்களுக்கான ரியான் கல்வி உதவித்தொகை பெற அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான ரியான் கல்வி உதவித் தொகை 2017 ஆம் ஆண்டில் பெற விண்ணப்பிக்க டிசம்பர் 28 ஆம் நாள் இறுதி நாள் ஆகும்.
ரியான் கல்வி உதவித்தொகை பெற ஒவ்வொரு மாணவருக்கும் ரூபாய் 10,000 தொகை என மொத்தம் தேர்வு செய்யப்படும் பத்து மாணவர்களுக்கு வழங்கப்படும்.
ரியான் :
ரியான் கல்வி உதவித்தொகை பெற எட்டாம் வகுப்பு முதல் பிள்ஸ் 2 வகுப்பு வரையுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி :
ரியான் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் தாங்கள் எழுதிய தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் . மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற பெற்றிருக்க வேண்டிய மொத்த மதிப்பெண்கள் எண்ணிக்கை 80 % இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூபாய் 2 ல்ட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும் அத்தகைய குடும்ப மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க ரியான் அமைப்பு திட்டமிட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சென்று அறிவிக்கையில் உள்ள விதிமுறைகள் படிக்கவும். அதிகாரப்பூர்வ இணைய இனைப்பில் இமெயிலினை பதிவு செய்ய வேண்டும். அதன் பின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும். தேவைப்படும் தகவல்களை கொடுத்து முறையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தேவைப்படும் டாக்குமெண்டுகளை இணைக்கவும்.
அதிகாரப்பூர்வ இணைய இணைப்பினை இங்கு கொடுத்துள்ளோம். தேவைப்படும் டாக்குமெண்டுகளானது பேமிலி இன்கம் அத்துடன் மார்க் சீட்டுகள் அத்துடன் அதிகாரப்பூர்வ ஐடி புரூப் இணைக்க வேண்டும்.
மாணவர்களுக்கான இந்த கல்வி உதவித்தொகையினை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி டிசம்பர் 28 ஆகும்.
சார்ந்த பதிவுகள்:
தேசிய சைபர் ஒலிம்பியாட் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கவும்
கல்பனா சாவ்லா நேசனல் ஸ்காலர் தேர்வினை எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்