கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களிடமிருந்து மத்திய அரசுக் கல்வி உதவித் தொகைக்கான புதுப்பிப்பு விண்ணப்பத்தினை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வரவேற்றுள்ளது.
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு உயர் கல்வி பெறுவதற்கான கல்வி உதவித் தொகையை படிப்புக் காலம் முழுவதும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த மத்திய கல்வி உதவித் தொகையை வாங்க ஆரம்பித்த கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களிடமிருந்து 4-வது புதுப்பித்தல் விண்ணப்பத்தினை சிபிஎஸ்இ வரவேற்றுள்ளது.
இந்த விண்ணப்பப் படிவத்தினை www.cbse.nic.in என்னும் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இணையத்திலேயே விண்ணப்பப் பதிவு செய்ய டிசம்பர் 15 கடைசி தேதியாகும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து 2018 டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.