தாய், தந்தையரை இழந்த மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு உதவும் வகையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு (ஏஐசிடிஇ) சுவநாத் எனும் உதவித்தொகையை வழங்குகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பங்களை ்அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு விபரங்களுக்கு: https://scholarships.gov.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
உதவித்தொகை விவரம்:
ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் 3 ஆண்டு வரையிலான டிப்ளமோ மற்றும் 4 ஆண்டு வரையிலான இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. டிப்ளமோ அளவில் ஆயிரம் பேர், பட்டப்படிப்பு அளவில் ஆயிரம் பேர் என மொத்தம் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
கல்விக் கட்டணம் மற்றும் கம்ப்யூட்டர், புத்தகம், சாப்ட்வேர், இதர கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கான செலவினங்கள் இந்த உதவித்தொகை திட்டத்தில் அடங்கும்.

உதவித்தொகை பெறத் தகுதிகள்:
பெற்றோர் இல்லாத மாணவ, மாணவிகள் அல்லது கோவிட் -19 பெருந்தொற்றால் தாய் அல்லது தந்தையரை அல்லது பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதி உண்டு. இவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
இட ஒதுக்கீடு:
மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறையின்படி, இந்த ஏஐசிடிஇ உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஜனவரி 31 ஆகும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு விபரங்களுக்கு: https://scholarships.gov.in/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












