12-வது முடித்தவர்கள் நிலை என்ன? பள்ளிக் கல்வித் துறையின் புதிய உத்தரவு!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களின் நிலை தற்போது என்ன என்று கண்டறிந்து அதனை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களின் நிலை தற்போது என்ன என்று கண்டறிந்து அதனை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

12-வது முடித்தவர்கள் நிலை என்ன? பள்ளிக் கல்வித் துறையின் புதிய உத்தரவு!

இது குறித்து கல்வித்துறையின் சாா்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகளில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வி மேற்கொள்கிறார்களா? அல்லது பணிபுரிகிறார்களா? என்பதை கண்டறிந்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், மேலே குறிப்பிட்ட மாணவர்கள் உயா்கல்வி பயின்று வந்தால் அது குறித்த விவரங்களையும், பணிபுரிகிறாா்கள் எனில் அது குறித்து விவரங்களையும் உள்ளீடு செய்ய வேண்டும். இதற்கென கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில், தனிப் பக்கம் "எமிஸ்" ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அதில், தலைமை ஆசிரியா்கள் தங்களது பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

மேலும், குறுவள மைய தலைமை ஆசிரியா்களும், தங்களது ஆளுகையின் கீழ் உள்ள பள்ளிகளில் படித்த மாணவர்களின் நிலை குறித்த விவரங்களைக் கண்டறிந்து பதிவு செய்ய வேண்டும் என அதில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி பணிகளை கண்காணிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
What is the status of those who finished 12th? A new directive from the School Education Department
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X