புதுடெல்லி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள துறைமுகத்தில் அக்கவுன்ட்ஸ் அதிகாரி, மூத்த அக்கவுன்ட்ஸ் அதிகாரி பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஏப்ரல் 12-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
மொத்தம் 6 பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன. அக்கவுன்ட்ஸ் அதிகாரி பணியிடங்கள் 4-ம், மூத்த அக்கவுன்ட்ஸ் அதிகாரி பணியிடங்கள் 2-ம் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க சிஏ படித்திருக்கவேண்டும். மேலும் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுன்டண்ட்ஸ் ஆஃப் இந்தியாவில் (ஐசிஏஐ) பதிவு செய்திருக்கவேண்டும்.
வயது 30-க்கு மிகாமல் இருக்கவேண்டும். மூத்த அக்கவுன்ட்ஸ் ஆபீஸர் பணியிடங்களுக்கு வயது 35-க்கு மிகாமல் இருக்கவேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுச் சலுகைகள் உண்டு.
சம்பளம் ரூ. 20600-46500/ என்ற அளவில் வழங்கப்படும். விசாகப்பட்டினம் துறைமுகத்தில் அவர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பங்களை The Secretary, Visakhapatnam Port Trust, Visakhapatnam-530035. என் முகவரிக்கு ஏப்ரல் 12-ம் தேதிக்குள் அனுப்பித் தரவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://www.vizagport.com/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.