சென்னை: இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து சாதனை புரிந்த கதாநாயகர்களின் கதைகள் புத்தகமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
வீர்கதா எனற பெயரில் இதை நேஷனல் புக் டிரஸ்ட் அமைப்பு கொண்டு வந்துள்ளது.
ராணுவத்தில் பணிபுரிந்தபோது வீரசாகசம் செய்து பரம்வீர் விருதைப் பெற்ற போர் ஹீரோக்களின் கதைகள் தான் வீர்கதா என புத்தகமாக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகங்கள் கதைகள் மற்றும் படங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் சிறுவர்களை இது வெகுவாகக் கவர்ந்துள்ளது.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 5 செட் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் இன்று வெளியிடவுள்ளார்.
குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமை தாங்கவுள்ளார்.