லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இந்தத் தேர்வுகளை உத்தரப் பிரதேச மாநில இடைநிலைக் கல்வி தேர்வு வாரியம் (யுபிஎஸ்இஎஸ்எஸ்பி) நடத்துகிறது.
பி.ஜி. ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் என 9 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது குறைந்தபட்சம் 21 நிறைந்திருக்கவேண்டும். தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு Rs. 9,300/- to Rs. 34,800 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்.
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க பொது மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆசிரஹியர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.upsessb.org/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.