டெல்லி: மருத்துவர் பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளதாக மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) அறிவிப்பு செய்துள்ளது.
டாக்டர்கள், டெக்னிக்கல் அதிகாரிகள், சீனியர் சயின்டிபிக் அதிகாரி பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இங்கு காலியாகவுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மே 12-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
அசிஸ்டண்ட் அந்த்ரோபாலஜிஸ்ட் பணியிடங்கள் 2-ம், டெக்னிக்கல் ஆபீஸர் பணியிடம் ஒன்றும், சீனியர் சயின்டிபிக் ஆபீஸர் பணியிடம் ஒன்று, பெண் மருத்துவ அதிகாரி பணியிடங்கள் 2-ம் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களை யுபிஎஸ்சி, தேர்வு மூலம் நிரப்பவுள்ளது.
நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.upsc.gov.in/ -ல் தொடர்புகொண்டு விண்ணப்பங்களை அனுப்பலாம்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களை இந்த இணையதளத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். மே 12-ம் தேதி விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாளாகும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.