யூபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தேர்வுக்கான வயது வரம்பை குறைப்பது குறித்து பஸ்வான் கமிட்டி அறிவித்துள்ளது . யூபிஎஸ்சிக்கான தேர்வு எழுதுவதற்கான நிர்ணயிக்கப்பட்ட வயதினை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசணை நடத்தி வருகின்றது.
யூபிஎஸ்சியின் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ்,ஐஆர்எஸ் பணிகளுக்கு வருடம் தோறும் அறிவிக்கை மூலம் முதண்மை, முக்கிய மற்றும் நேரடி தேர்வுகள் நடத்தி தேர்வுக்கான மதிபெண்கள் வைத்து பணியிடங்களை நிர்ணயம் செய்யும் . அத்தகைய மத்திய ஆட்சிப்பணி ஆணையம் 2015 ஆம் ஆண்டு பஸ்வான் தலைமையில் குழு அமைத்து மாற்றங்களை புகுத்த திட்டமிட்டிருந்தது.
ஓய்வு பெற்ற அதிகாரி பஸ்வான் தலைமையில் நடைபெற்ற ஆய்வை அடுத்து மத்திய அமைச்சகத்திடம் ஆய்வை சமர்பித்தது. மார்ச் மாதம் பஸ்வான் தலைமையில் சமர்பிக்கப்பட்டு அறிவிக்கையை அடுத்து யூபிஎஸ்சியின் தேர்வர்களுக்கான அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பை குறைப்பது குறித்து தெரிவித்துள்ளது . யூபிஎஸ்சியின் தேர்வு எழுதுவதை 32 வயதாக குறைப்பது குறித்து பஸ்வான கமிட்டி அறிவித்திருந்தது.
மத்திய அரசு பஸ்வான் கமிட்டியின் அறிக்கையை பரிசீலித்து வருவதாக தெரிவித்தது. அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆலோசணைகளை பரிசிலித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. யூபிஎஸ்சியின் வயது வரம்பு அதிகரிப்பு குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டது . இரு வாய்ப்புகளை அதிகப்படுத்தியிருந்தது . ஆனால் இந்த வருடம் அதனை குறைப்பது குறித்து யூபிஎஸ்சி அறிவிக்குமா என்ற கேள்வியும் வல்லுநர்களிடம் இருக்கின்றது.
மத்திய அரசு இதுகுறித்து தெளிவான முடிவு எடுக்க வேண்டும், வயது வரம்பு குறைப்பது குறித்து யூபிஎஸ்சி மாற்றி முடெய்வெடுப்பதை விட நல்ல ஆரோக்கியமான மாற்றங்களை போட்டி தேர்வில் கொண்டு வரலாம்.
சார்ந்த பதிவுகள்:
யூபிஎஸ்சியின் சிடிஎஎஸ் தேர்வுக்கான அட்மிட் கார்டு வெளியீடு
யூபிஎஸ்சியின் புவியியலாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடு