மத்திய அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் மொயின்ஸ் தேர்வு இன்று காலை 10 மணி அளவில் சென்னையில் தொடங்கியது . நாடு முழுவதும் யூபிஎஸ்சியின் மெயின்ஸ் தேர்வை எழுத தொடங்கிவிட்டனர் . யூபிஎஸ்சி திட்டமிடப்படி தேர்வர்களுக்கு நேரப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
யூபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் தேர்வானது முதண்நிலை , முக்கிய தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூன்று நிலைகளை கொண்டது. யூபிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வின் முதண்நிலை தேர்வானது ஜூந் 19ஆம் தேதி நடைபெற்றது .
யூபிஎஸ்சியின் முதண்நிலை தேர்வில் வென்றவர்கள் சென்னையில் இன்று 900 பேர் முதண்மை தேர்வை எழுதுகின்றனர், நாடு முழுவது யூபிஎஸ்சியின் முக்கிய தேர்வான மெயின்ஸ் தேர்வை மொத்தம் 13,350 பேர் எழுதுகின்றனர். காலை 9 மணிக்கு தொடங்கியது மதியம் 12 மணி வரை நடைபெறும் . மதியம் 2 மணிக்கு தொடங்கும் மற்றொருத்தாள் மாலை 5 மணி வரை நடைபெறும்.
ஐந்து நாட்கள் நடைபெறும் மெயின்ஸ் தேர்வானது மொழித்தாள்கள் இரண்டு கொண்டது . அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளுள் ஒன்று அத்துடன் ஆங்கிலம், விருப்ப பாடத்தில் இருதாள்கள் . பொது அறிவு தாள்கள் நான்கு அத்துடன் கட்டுரைத் தாள் ஒன்று என ஒன்பது தாள் கொண்டது யூபிஎஸ்சியின் மெயின்ஸ் தேர்வு .யூபிஎஸ்சியின் மெயின்ஸ் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் நேரடி தேர்வுக்கு பங்கேற்க புதுடெல்லிக்கு அழைக்கப்படுவார்கள்.
யூபிஎஸ்சியின் இறுதிநிலை தேர்வில் வெற்றி பெறுபவர்களே யூபிஎஸ்சியின் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் , ஐஆர்எஸ் என்று 24 பணிகளுக்கு மதிபெண்களுக்கு ஏற்ப பனியிடங்கள் பெறுவார்கள்.
சார்ந்த பதிவுகள்:
யூபிஎஸ்சியின் மெயின்ஸ் தேர்வு எழுத அட்டவணை வெளியீடு
ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளான யூபிஎஸ்சி மெயின்ஸ் அட்மிட் கார்டு வெளியீடு
நாடு முழுவதும் நேற்று கோலகலமாக சிவில் சர்வீஸ் எக்ஸாம் , யூபிஎஸ்சி கேள்விகளின் போக்கு