சென்னை: 60 உயர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய பொதுத் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.
உதவி இயக்குநர், உதவி ஆர்க்கிடெக்ட், துணை ஆர்க்கிடெக்ட் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 4-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், குடிமைத் தேர்வுகள், வனத்துறை அதிகாரிகள், பொறியியல் துறை, பாதுகாப்புத் துறை, கப்பற்படை உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி ஆட்களைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய பொதுத் தேர்வாணையம் ஈடுபட்டு வருகிறது.

பல்வேறு துறைகளில் இந்தபர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியான நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் பிப்ரவரி 4-ம் தேதிக்குள் வி்ண்ணப்பங்களை அனுப்புதல் நலம்.
ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பித்த பிறகு விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுத்து பிப்ரவரி 5-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு யுபிஎஸ்சி இணையதளமான -ல் தொடர்புகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












