சென்னை: மத்திய ஆயுதப் படை போலீஸ் பணிக்கான நேர்முகத் தேர்வு 2016-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது என மத்திய பொதுத் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய பொதுத் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய ஆயுதப் படை போலீஸ் பணிக்கு(உதவி கமாண்டெண்ட்) நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு ஜனவரி 11-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தேர்வுகள் 2 ஷிப்டுகளாக நடைபெறும். முதல் ஷிப்ட் தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கும். 2-வது ஷிப்ட் பிற்பகல் 1 மணிக்குத் தொடங்கும்.
இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் யுபிஎஸ்சி-யின் இணையதளமான http://www.upsc.gov.in-ல் தொடர்புகொண்டு இ-சம்மன் கடிதத்தை டவுன்லோடு செய்யவேண்டும்.
அந்தக் கடிதத்தைக் கொண்டு வந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.
For Quick Alerts
For Daily Alerts
English summary
Union Public Service Commission (UPSC) has released Central Armed Police Forces (Assistant Commandants) Examination schedule for Personality Test/ Interview. The interview, scheduled between January 11 January 21, 2016 will be held in two shifts: Forenoon session from 10 am and afternoon session from 1 pm. Candidates can download the e-summon letter from the UPSC official website
Story first published: Thursday, December 24, 2015, 12:02 [IST]