சென்னையில் நீட்தேர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை தொடர்ந்து நடைபெற்ற சிக்கல்களை தொடர்ந்து மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் செப்டமபர் தொடக்கத்தில் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து நடைபெற்றது .
இதனையடுத்து துணை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டது 19 ஆம் தேதி முதல் தொடங்கியது இதுவரை நடைபெற்ற கவுன்சிலிங்கில் முதல் நாளில் மாற்றுதிறனாளிகள் அத்துடன் இராணுவ வீரரின் வாரிசுகளுக்கு நடைபெற்றது . அரசு இடங்கள் 484 போக தனியார் இடங்கள் 5473 இடங்கள் இருந்தன.
துணை மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வில் இதுவரை திங்கள் கிழமை 18 அரசு இடங்கள் நிரப்ப பட்டன. பொதுபிரிவினர் கலந்தாய்வுக்கு 1261 பேர் கலந்துகொண்டனர் . 638 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர் . பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு 240 பேர் மற்றும் பிபார்ம் படிப்புக்கு 189 பேர் இயன்முறை மருத்துவ படிப்புக்கு 76 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர் . மொத்தம் 638 இடங்கள் நிரப்பபட்டுள்ளன. 480 அரசு இடங்கள் , 143 தனியார் இடங்கள் உள்ளன.
பொதுபிரிவினருக்கான கலந்தாய்வின் முடிவில் 40 அரசு இடங்கள் உள்ளன. 5583 இடங்கள் அரசு இடங்கள் காலியாகவுள்ளன. தொடர்ந்து இன்றும் கலந்தாய்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், தொடர்ந்து இடங்கள் நிரப்படும் என்று நம்பபடுகிறது . துணை மருத்துவப் படிப்புகளுக்கான ஒன்பது பாடங்களுக்கும் கலந்தாய்வு ஒன்றாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
சார்ந்த பதிவுகள்:
துணை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று முதல் தொடக்கம்