சென்னை: கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸஸ்(கேஐஎஸ்எஸ்) இன்ஸ்டிடியூட்டின் வியத்தகு கல்விச் சேவையைப் பார்த்து உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் பாராட்டியுள்ளார்.
ஒடிஸா மாநிலம் புவனேஸ்வரிலுள்ள கேஐஎஸ்எஸ் இன்ஸ்டிடியூட்டுக்கு நேற்று அகிலேஷ் யாதவ் வருகை தந்தார்.
அங்குள்ள 25 ஆயிரம் பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விச் சேவையைப் பார்த்து அவர் வியப்படைந்தார். இத்தனை குழந்தைகளுக்கு இலவச ல்வி, உணவு, இருப்பிடம் ஆகியவற்றை அளிக்கும் கேஐஎஎஸ்எஸ் நிறுவனரும், கேஐஐடி பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் அச்சுதா சமந்தாவை அகிலேஷ் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
கேஐஎஸ்எஸ் இன்ஸ்டிடியூட்டைப் பற்றி நான் ஏற்கெனவே கேள்விப்பட்டேன். ஆனால் முதல்முறையாக இப்போதுதான் நான் இங்கு வந்துள்ளேன். இங்கு வழங்கப்பட்டு வரும் கல்விச் சேவையைப் பார்த்து நான் வியந்துவிட்டேன். இவ்வளவு அதிகமான மாணவர்களுக்கு இலவசமாக கல்வி, உணவு, தங்குமிடம், அவர்கலுக்கு மருத்துவ வசதியைத் தருவது என்பது நிச்சயமாக அசாதாரணமான காரியம்.
டாக்டர் அச்சுதா சமந்தாவுக்கு கடவுளின் கருணை நிச்சயம் கிடைத்துள்ளது. அதனால்தான் அவர் இதுபோன்ற வியத்தகு காரியங்களைச் செய்ய முடிகிறது என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து அவர் கேஐஐடி பல்கலைக்கழக வளாகத்தையும் சுற்றிப் பார்த்தார்.
பின்னர் அவர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 3-வது கேஐஐடி சர்வதேச மாதிரி ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.