சென்னை: கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (கேஐஎஸ்எஸ்) மாணவ, மாணவிகளுடன் ஐ. நா. சபையின் இந்திய ஒருங்கிணைப்பாளர் யூரி அஃபனாசீவ் கலந்துரையாடினார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமைந்துள்ள கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி (கேஐஐடி) பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கேஐஎஸ்எஸ் இன்ஸ்டிடியூட்.
இந்த இன்ஸ்டிடியூட்டுக்கு ஐ. நா. சபையின் இந்திய ஒருங்கிணைப்பாளர் யூரி அஃபனாசீவ் நேற்று வருகை தந்தார். அவருடன் ஐ.நா. சபைக்கா இந்திய இயக்குநர் ஜேக்கோ காலியர்ஸ், துணை இயக்குநர் மரினா வால்ட்டர் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
அவர்களுக்கு கேஐஎஸ்எஸ் மாணவ, மாணவிகள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அவர்களிடையே யூரி அஃபனாசீவ் கலந்துரையாடினார்.
மேலும் கேஐஎஸ்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள பழங்குடி மாணவர்களுக்கான இலவச பள்ளி, கல்லூரிகளையும் அவர் சுற்றிப் பார்த்து பாராட்டினார். கலிங்கா பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் அச்சுதா சமந்தாவின் சீரிய பணிகளையும் அவர் மனமுவந்து பாராட்டினார்.
கல்விக்காக ஐ.நா. மேற்கொண்டு வரும் பணிகள், அதை மாணவ, மாணவிகள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதையும் அவர் அப்போது மாணவர்களிடம் விளக்கினார்.