புதுடெல்லி: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி உள்பட 19 கல்லூரிகளுக்கு பாரம்பரிய அந்தஸ்தை பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) வழங்கியுள்ளது.
100 வருடத்துக்கும் மேலான பழமையான கல்லூரிகளைத் தேர்வு செய்து அந்தக் கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்கு பாரம்பரிய அந்தஸ்தை யுஜிசி அளித்து வருகிறது.

இதற்காக யுஜிசி தேர்வுக் குழு பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி உள்ளிட்ட 19 கல்லூரிகளுக்கு பாரம்பரிய அந்தஸ்தை தேர்வுக் குழு அளித்துள்ளது.
இதுகுறித்துத் தேர்வுக் குழுவைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் கூறியதாவது;
100 வருடத்துக்கும் அதிகமாக நடைபெற்று வரும் கல்லூரிகளில் சிலவற்றைத் தேர்வு செய்து அந்தக் கல்லூரிகளுக்கு பாரம்பரிய அந்தஸ்தை வழங்கி வருகிறோம்.

தமிழகத்தில் செயின்ட் ஜோசப் கல்லூரி, மும்பை செயின்ட் சேவியர் கல்லூரி, கோட்டயம் சிஎம்எஸ் கல்லூரி, அமிருதசரஸில் கல்சா கல்லூரி உள்ளிட்ட 19 கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளோம்.
இந்தக் கல்லூரிகளுக்கு பல்வேறு நிதியுதவிகளையும் யுஜிசி அளிக்கும் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications












