கல்வி நிறுவனங்களில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தடையற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று உயா் கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

அன்மையில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற சூழல் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, அனைத்துப் படிப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டினை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
கல்வி நிறுவன வளாகங்களில் அவர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் சாய்வு தளங்கள் அமைக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்றச் சூழலை உருவாக்க வேண்டும், மேலும், உயா் கல்வி நிறுவனங்களில் சமவாய்ப்பு மையம் முறையாகச் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளைச் செயல்படுத்த யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் செயல்படுத்தியது குறித்து அறிக்கையாக யுஜிசிக்கு டிசம்பர் 12-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என யுஜிசி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












