நாடு முழுவதும் 24 போலிப் பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருவதாகப் பல்கலைக் கழகங்களுக்கான மானியக் குழு (UGC) அறிவித்துள்ளது.
இந்தியாவில் பல்கலைக் கழகத்தின் மானியக் குழுவால் அங்கீகரிக்கப்படாமல் மொத்தம் 24 பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருகிறது என யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவிலேயே உத்தரப்பிரதேசத்தில் தாக அதிக எண்ணிக்கையில் போலி பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும், அங்கு 8 போலி பல்கலைக் கழகங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தில்லியில் 7 போலி பல்கலைக் கழகங்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2, தொடர்ந்து, கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி மற்றும் மராட்டியத்தில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து யுஜிசி மானியக்குழு செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறுகையில், யுஜிசி வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் இந்தியாவில் தற்போது 24 சுயநிதி மற்றும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இதுபோன்ற போலி பல்கலைக் கழகங்கள் குறித்து விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். இந்த பல்கலையில் பயிலும் மாணவர்களுக்குப் பட்டம் வழங்க அதிகாரம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.