சென்னை: யூகோ வங்கியில் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள் காலியாகவுள்ளன.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் மார்ச் 19-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
மொத்தம் 5 பாதுகாப்பு அதிகாரி பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பட்டப் படிப்பு படித்திருக்கவேண்டும். மேலும் ராணுவம், விமானப்படை, கப்பற்படை உள்ளிட்டவற்றில் 5 ஆண்டு பணியாற்றிய அனுபவம் இருக்கவேண்டும். வயது 21 முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும்.
நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பங்களை வங்கிக் குழு பரிசீலித்து ஆட்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும்.
விண்ணப்பங்களை மார்ச் 19-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும்.
கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற விவரங்களுக்கு https://www.ucobank.com என்ற யூகோ வங்கியின் இணையதளத்தைக் காணலாம்.