சென்னை: சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் ராஞ்சியைச் சேர்ந்த தௌரியான் வேர்ல்ட் ஸ்கூல் (டிடபிள்யூஎஸ்) பள்ளி மாணவர்கள் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகள் (2015-16) போட்டிகள் சமீபத்தில் நடைபெற்று முடிந்தன. இதில் டிடபிள்யூஎஸ் பள்ளி மாணவர்கள் 18 தங்கம், 11 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். மொத்தம் 41 பதக்கங்களைக் கைப்பற்றி பள்ளிக்குப் பெருமைச் சேர்ந்துள்ளனர்.
உலக அளவில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் போட்டியாகும் சர்வதேச கணஇத ஒலிம்பியாட். ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நாடுகளில் இந்த போட்டிகள் நடத்தப்புடம். முதலாவது போட்டி 1959-ல் ருமேனியாவில் நடைபெற்றது.
தற்போது 100 நாடுகள் வரை இப்போட்டியில் கலந்துகொள்கின்றனர்.
அந்தப் போட்டியில்தான் தற்போது டிடபிள்யூஎஸ் பள்ளி மாணவர்கள் பதக்கங்கள் வென்று சாதனை புரிந்துள்ளனர்.
டிடபிள்யூஎஸ் பள்ளியானது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அமைந்துள்ள சிபிஎஸ்இ பள்ளியாகும். இந்தப் பள்ளியை நிறுவியவர் அமித் பஜ்லா. இதேபோன்று நாடு முழுவதும் 100 பள்ளிகளைத் திறக்க பஜ்லா திட்டமிட்டுள்ளார்.