அரசு சித்த் மருத்துவ கல்லுரிகளில் இரண்டு ஆண்டுகள் ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

அரசு அறிவிப்பு :
பாளையங்கோட்டை மற்றும் சென்னை சித்த மருத்துவ கல்லுரிகளில் இரண்டறை ஆண்டு ஒருங்கிணைந்த மருந்தாளுநர் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அரசு குறிப்பு வெளியிட்டுள்ளது .
பிளஸ் 2 படிப்பில் அறிவியல் பாடங்களை எடுத்து படித்தவர்கள் இப்பாடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பினை ரூபாய் 350 டிடி செலுத்தி பெற்றுகொள்ள வேண்டும் . டிடி செலுத்த வேண்டிய முகவரியானது வரவோலை இயக்குநர் , இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, சென்னை 106 என்ற பெயருக்கு எடுக்க வேண்டும் .
விண்ணப்பங்களை சென்னை அரசு சித்த மருத்துவ கல்லுரி மற்றும் யோகா மற்றும் இயற்க்கை மருத்துவ கல்லுரிகளில் பெற்றுகொள்ளலாம்..பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லுரி மற்றும் மதுரை ஹோமியோபதி திருமங்கலம் அரசு மருத்துவ கல்லுரி நாகர்கோயில் அரசு கோட்டாறு அரசு ஆயுர்வேத கல்லுரியில் நேரில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம் .
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய தேதி செப்டமர் 28 ஆகும் . மேலும் தேவைப்படும் விவரங்களை தெரிந்துகொள்ள தமிழ்நாடு மருத்துவத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம் . அதிகாரபூர்வ இணையதளத்திற்கான இணைப்பை இங்கு இணைத்துள்ளோம் . மருந்தாளுநர் படிப்புக்கு விண்ணப்பித்து இரண்டாண்டு படிப்பினை பெற்று கொள்ளவும் மாணவர்களே காலம் தாழ்த்தமல் விரைந்து செயல்படுங்கள்.
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












