சென்னை: டெக்னீஷியன்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் இருப்பதாக தெலங்கானா மாநில பொதுத் தேர்வாணையம்(டிஎஸ்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
தகுதியும், திறமையும் வாய்ந்த டெக்னீஷியன்கள் இந்தப் பணியிடங்களுக்கு ஜனவரி 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மொத்தம் 44 டெக்னீஷியன் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. கிரேட் 2 பிரிவில் பணியிடங்களில் டெக்னீஷியன்கள் பணிமர்த்தப்படுவர். இந்தப் பணியிடங்கலுக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ படித்திருக்கவேண்டும். வயது 18 முதல் 44 -க்குள் இருக்கவேண்டும்.
தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஜனவரி 28-ம் தேதிக்குள் தபாலில் அனுப்பவேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
இந்தப் பணியிடங்களுக்கான அட்மிட் கார்டுகள் டிஎஸ்பிஎஸ்சி இணையதளமான http://www.tspsc.gov.in-ல் கிடைக்கும்.
இதற்கான தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெறும்.


Click it and Unblock the Notifications












