சென்னை : தமிழ் நாட்டில் பிஎட் பட்டப்படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 21 முதல் 30ந் தேதி வரை நடைபெற்றது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்றே (ஜூலை 3ந் தேதி) கடைசி நாளாகும்.
தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு மொத்தம் 1,707 இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள், சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்த நாடு அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி, கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி, வேலூர் காந்திநகர் அரசு கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் பேர்லாண்ட்ஸ் சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி, திரு நெல்வேலி பாளையங்கோட்டை செயின்ட் இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி, திருவட்டாறு ஆத்தூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி ஆகிய 13 இடங்களில் ஜூன் 21ந் தேதி காலை 10 மணி முதல் ஜூன் 30ந் தேதி மாலை 3 மணி வரை பிஎட் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் கீழ் உள்ள முகவரியை சென்றடையுமாறு அனுப்பி வைக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
செயலாளர்,
தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018,
விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி),
காமராஜர் சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை-5


Click it and Unblock the Notifications












