சென்னை: ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் செய்யுமாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அடுத்தஆண்டு ஜனவரி 14-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மொத்தம் 14 ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஊதியம் 9,300-34,800/- (PB2) + 4,400/- என்ற அடிப்படையில் இருக்கும்.
கல்வித் தகுதி: பொருளாதாரம், புள்ளியியல், வணிக நிர்வாகம், கணிதம், சோஷியாலஜி, அந்ரோபாலஜி, விவசாய பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் மாஸ்டர் டிகிரி படித்திருக்கவேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்கவேண்டும். எஸ்சி, எஸ்டி, எம்பிசி, ஓபிசி பிரிவினருக்கு வயதுச் சலுகைகள் உண்டு.
விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு தபாலில் ஜனவரி 14-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.