தமிழக அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 9351 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி நடைபெற்றது.
இத்தோ்வு எழுத 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 போ் விண்ணப்பித்தனர். இதற்காக மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 962 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.
தேர்வு நடைபெற்று 4 மாதம் ஆன நிலையில் குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தமிழக அரசு பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி அடுத்த மாதம் இறுதியில் குரூப் 4 தேர்வு முடிவு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குரூப் 1 தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வு முடிவுகளின் தேதியையும் டிஎன்பிஎஸ்சி ்அறிவித்துள்ளது.
தமிழக அரசு பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட முழு பட்டியலை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.