டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) சார்பில் கிராம நிர்வாக அதிகாரிகள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர் உள்ளிட்ட 7 வகையான பணிகளுக்கான குரூப் 2 தேர்வு கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதியன்று நடைபெற்றது.
தொடர்ந்து, 2019 நவம்பர் 12ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை அடுத்து இப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,882 ஆக அதிகரிக்கப்பட்டது. ,இதையடுத்து கிராம நிா்வாக அதிகாரி, இளநிலை உதவியாளா், வரி வசூலிப்பாளா் உள்ளிட்ட பணிகளுக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு பிப்.19 முதல் மாா்ச் 17-ஆம் தேதி வரையில் நடத்தப்பட்டது
அதில் மொத்தமுள்ள 6,007 பணியிடங்களில் 5,798 பணிகள் நிரப்பப்பட்ட நிலையில், மீதம் உள்ள 209 இளநிலை உதவியாளா் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படாமல் இருந்தது.
இதனிடையே, கடந்த நவம்பர் 2 முதல் டிசம்பர் 9-ஆம் தேதி வரையில் டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட தட்டச்சா் பணிக்கான கலந்தாய்வில் மொத்தம் 221 இடங்கள் நிரப்பப்படவில்லை. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்கள் என காலியாக உள்ள 430 பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) வெளியிட்டுள்ளது. அதில், இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு வரும் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கலந்தாய்விற்கான தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும் டிஎன்பிஎஸ்சி அதிரடியாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












