சென்னை : குரூப் 1 மெயின் தேர்வு துணை ஆட்சியர் உள்ளிட்ட 74 பணியிடங்களுக்காக 2016ல் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று தேர்வு முடிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. துணை ஆட்சியர் உள்ளிட்ட 74 பணியிடங்களுக்காக 2016ல் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் குரூப் 1 மெயில் தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் 5ந் தேதி முதல் 9ந் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு அழைக்கப்படுபவர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்பில் கலந்து கொள்ளலாம்.