சென்னை: தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சொசைட்டியில் (கோ-ஆப்டெக்ஸ்) மார்க்கெட்டிங் வேலை காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். மொத்தம் 30 பணியிடங்கள் மார்க்கெட்டிங் உதவியாளர் பிரிவில் காலியாக உள்ளன. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். வயது 18 முதல் 33-க்குள் இருக்கலாம்.
தகுந்த ஆவணங்களுடன் இதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 8-ம் தேதிக்குள் அனுப்பலாம். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். தேர்வு செய்யும் நபர்கள் பட்டியல் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் சொசைட்டியின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
கூடுதல் விவரங்கள் http://www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சொசைட்டியானது கோ-ஆப்டெக்ஸ் என்று பரவலாக அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளித்துறையின் கீழ் கோ-ஆப்டெக்ஸ் இயங்கி வருகிறது.