அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 509 கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,78,129 இடங்களில் சேருவதற்கு 1,59,631 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இதற்கான ரேண்டம் எண்கள் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில் வியாழக்கிழமை அமைச்சர் அன்பழகன் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய அன்பழகன்,
பொறியியல் கவுன்சிலிங் ஜூலை 6-ம் தேதி தொடங்கும் எனவும், கலந்தாய்வை ஜூலை 30-க்குள் முடிக்க முடியாது என்பதால் உயர் நீதிமன்றத்தில் கால நீட்டிப்பு கேட்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தரவரிசைப் பட்டியலில் முதல் 10 பேரும் 200-க்கு 200 கட் ஆஃப் பெற்றுள்ளனர். கீர்த்தனா ரவி முதலிடமும், ரித்திக் 2-ஆம் இடமும், வர்ஷினி 3-ஆம் இடமும் பெற்றுள்ளனர்.
தரவரிசைப் பட்டியலை காண இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் தங்களது பயனர் எண் பிறந்த தேதி, ரகசிய குறியீட்டு எண்ணை கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.