பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று மாலை (ஆகஸ்ட் 26) ரேண்டம் எண்கள் வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் 2020-ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் படிப்புகளுக்குச் சேர பொறியியல் கலந்தாய்வு கடந்த ஜூலை 15ம் தேதியன்று தொடங்கி ஆகஸ்ட் 15ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 1.58 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, விண்ணப்பித்த மாணவர்களில் ஒரே மதிப்பெண் பெற்றவர்களை வரிசைப்படுத்துவதற்கான ரேண்டம் எண், இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய 1,28,118 மாணவர்களில் சுமார் 14 ஆயிரம் பேர் சான்றிதழைப் பதிவேற்றம் செய்யாமல் கலந்தாய்விலிருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
anna university be counselling education exam university student chennai tamilnadu அண்ணா பல்கலைக் கழகம் தேர்வு கல்வி மாணவர்கள் சென்னை தமிழகம்
English summary
TNEA 2020 Random Number, Rank List, Counselling
Story first published: Wednesday, August 26, 2020, 15:47 [IST]


Click it and Unblock the Notifications












