சென்னை: ஸ்டெனோடைப்பிஸ்ட் பணியிடத்துக்காக விண்ணப்பங்களை அனுப்புமாறு தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பொரேஷன் (டிஎன்சிஎஸ்சி) அழைப்பு விடுத்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான டிஎன்சிஎஸ்சி தானிய கொள்முதல், விற்பனை, பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான தானியங்களை வழங்குதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறது. 1975-ம் ஆண்டில் இந்த நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது.
தமிழக அரசின் உணவு பாதுகாப்புத் துறையின் கீழ் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கிரேட்-3 ஸ்டெனோடைப்பிஸ்ட் பணியிடங்கள் காலியாகவுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மொத்தம் 10 பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்பவுள்ளனர். விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம்.
அரசு தொழில்நுட்ப டைப்ரைட்டிங் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். மேலும் சுருக்கெழுத்தும் தெரிந்திருக்கவேண்டும். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணியிடத்துக்கு விண்ணப்பம் செய்யலாம். வயது 18 முதல் 30 வயதுக்குள் இருக்கலாம். பிற்படுத்தப்பட்டோருக்கு 18 முதல் 32 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18 முதல் 35 வயது வரையும் இருக்கலாம்.
விருப்பமுள்ள நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பத்தை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் Tamil Nadu Civil Supplies Corporation, No,12, Thambusamy Road, Kilpauk, Head Office, Chennai - 600010 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும்.


Click it and Unblock the Notifications












